Thursday, May 28, 2015

மன்மோகன் சிங் அதிர்ச்சி பேட்டி :

மன்மோகன் சிங் மோதி அரசாங்கத்தை கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவர் சொன்ன தகவல்கள்:

1)  பிஜேபி சுயநலத்துக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிறது.   மக்களின் பிரச்னைகளை விட்டு மக்களை திசை திருப்பவே நாங்கள் செய்த ஊழலை தோண்டுகிறது பாஜக. இதனால் மக்களுக்கோ, எங்களுக்கோ எந்த விதத்திலும் லாபமுண்டா? சுவிஸ் வங்கிகளில் எங்கள் கணக்கில் இப்போது பணம் எதுவும் இல்லை என்றார்.

2) நாங்கள் காங்கிரஸ் ஆட்சியில் போட்ட அதே திட்டங்களையே,  புதிய பெயர்களில் மோதி அரசாங்கம், தாங்கள் போட்ட திட்டமாக வெளியிடுகிறது. புதிய திட்டங்களை மட்டுமே பிஜேபி செய்ததாக வெளியிட வேண்டும். இவ்வாறு நாங்கள் சுதந்திரம் வாங்கியபோதிலிருந்து வாக்குக்கொடுத்த அதே திட்டங்களை போட்ட திட்டங்களையே  நிறைவேற்றுவது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல என்று தெரிவித்தார்.

3) காங்கிரஸ் ஆட்சியில் போட்ட திட்டங்களாலேயே இப்போதைய ஆட்சியில்  இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்கிறது.  மோடியின் ஆட்சியினால் அல்ல என்றார் அவர். அதற்கு ஆதாரமாக தொழில் ஆரம்பிக்கக் கொடுக்கப்படும் கமிஷன் தொகை  குறைந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

4) மோடியின் ஆட்சியில் மக்கள் மட்டுமல்ல, மோடியின் சொந்தக்காரர்கள், மனைவி , அண்ணன், கூட நடுத்தர வர்க்கமாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், தன்னுடைய ஆட்சியின் போது , தான் மட்டுமில்லாமல் சோனியாவின் சொந்தக்காரர்கள் கூட பில்லியனர்களாக இருப்பதை சுட்டிக் காட்டினார்.

5) ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக் எழுந்த  குற்றச்சாட்டை மறுத்த அவர், அதிகாரம் எப்போதுமே தன்னிடம் இருந்ததில்லை, அப்படியிருக்க எப்படி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யமுடியும் என்றார் அவர். மோடியின் எதேச்சதிகாரப் போக்கை கண்டித்த அவர், சோனியாவின் ஒப்புதல் இல்லாமல் பிரதமர் தன்னிச்சையாக செயல்படுவது எதிர்பாராதது, அதிர்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.தன்னுடைய ஆட்சியில் இவ்வாறு ஒருதடவை கூட நடந்ததில்லை என்று அவர் நினைவு கூர்ந்தார்.

No comments: