Friday, May 6, 2011

சட்டி சுட்டதடா

http://www.youtube.com/watch?v=XqXNKPZp9JE

சட்டி சுட்டதடா... அருமையான பாட்டு... the problem is MSV's music and visual direction. Too much of mind boggling music carries away the original meaning of the song and so is direction... as if it is a dracula movie the song is taken with mood changing visuals and stunning music.. but the best part of it is Kannadaasan that is camouflaged ... i whole heartedly felt these lines :

நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லதுகெட்டது தெரிந்ததடா ..
..............................................
................................
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா...
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
..............................................
................................
ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா...
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா..

Wednesday, April 13, 2011

நீதியின் வேகம் :

இன்று தேர்தல் நாள். ஐந்து வருடம் ஆட்சி முடிந்து தேர்தல். கூடவே ஒரு தீர்ப்பும் வந்திருக்கிறது. நான் எதுவும் சொல்லத் தேவையில்லை.. செய்தியே போதுமானது என நினைக்கிறேன் : சேரன்மாதேவி எம்எல்ஏவின் வெற்றி செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு First Published : 13 Apr 2011 04:29:26 PM IST-- Dinamani சென்னை, ஏப்.13: 2006 பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவியில் வேல்துரை எம்எல்ஏ பெற்ற வெற்றி செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேல்துரை தற்போது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். 2006 தேர்தல் நடைபெறும்போது தமிழக அரசு ஒப்பந்தங்களைப் பெற்றிருந்ததால் அவர் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுகவின் பி.எச்.மனோஜ் பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வேல்துரை பெற்ற வெற்றி செல்லாது என இன்று தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மனோஜ் பாண்டியன், வேல்துரை அரசு ஒப்பந்தங்களைப் பெற்றிருப்பதாக 2006 தேர்தலில் மனுத் தாக்கலின்போதே தான் ஆட்சேபம் தெரிவித்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். எனினும் தேர்தலுக்குப் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்ததாகவும், அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகவும் அவர் கூறினார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வந்துள்ளது என்றார் அவர். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி எம்எல்ஏவாக வேல்துரை கடந்த 5 ஆண்டுகாலத்தில் பெற்ற ஊதியம், படிகள் அனைத்தையும் திரும்ப அளிக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.

Tuesday, March 22, 2011

ரஜினி சொல்ல மறந்தது

பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். சுனாமி பாதித்த ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் இந்த தகவலை ரஜினி வெளியிட்டார். ஜப்பானில் பூகம்பத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் `இந்தோ-ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ்` சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது:ஜப்பானிய மக்கள் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு, உடனே திரும்ப எழுந்துவிடுவார்கள். கடினமாக உழைக்கிற மக்கள் அவர்கள். அந்த மக்களுக்கு இயற்கை தொடர்ந்து இன்னல்களைக் கொடுத்து வருகிறது. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், தியானம்-பிரார்த்தனை மூலம் அவர்கள் மீண்டும் சகஜ நிலையை அடைந்துவிடுவார்கள்.அவர்களுக்காக இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஜப்பானிய மக்கள் மிகவும் கட்டுக்கோப்பானவர்கள். கடமை தவறாதவர்கள். அங்கு சுனாமி வந்தபோது, ஒரு ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர், பயணிகளிடம் `நம் நாட்டை சுனாமி தாக்கியிருக்கிறது.என்றாலும் நான் கடமையில் இருந்து தவறமாட்டேன்` என்று கூறி, தொடர்ந்து தனது கடமையை செய்திருக்கிறார். இன்னொரு இடத்தில் மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். சுனாமி தாக்கியதும் அவர்கள் சிதறிப் போனார்கள். சுனாமி அடங்கியபின் மீண்டும் அவர்கள் அதே வரிசையில் நின்று பொருட்களை வாங்கியிருக்கிறார்கள்.இதுபோன்ற கட்டுக்கோப்பும், கடமை உணர்வும்தான் ஜப்பானியர்களின் மிகச் சிறந்த குணம். ஜப்பானுக்கு வரும்படி என்னை, அந்த நாட்டின் பிரதமரும், சில முக்கியஸ்தர்களும் அழைத்திருக்கிறார்கள். ஜப்பானிய மக்கள் மீண்டும் சகஜ நிலையை அடைவதற்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார் ரஜினி. இந்த கூட்டத்தில், கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவக்குமார், பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், இரா.செழியன், படஅதிபர்கள் எல்.சுரேஷ், ராம்குமார், எஸ்.தாணு, எடிட்டர் மோகன், புஷ்பாகந்தசாமி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆனால் ரஜினி சொல்ல மறந்தது இது:

நான் ஒரு முட்டாள். எனக்கு முடிவு எடுக்கத் தெரியாது. தேர்தல் சமயத்தில் இமயமலை சென்று ஒளிந்துகொள்வதுதான் வழக்கம். இந்த முறை ஜப்பான் சென்று ஒளிந்து கொள்வேன் என்பதில் பெருமை அடைகிறேன்.