Sunday, June 21, 2009

நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு

BELOW IS THE ORIgINAL OF THE concise COMPOSITION I WROTE IN THINNAI( www.thinnai.com ).

ஸ்ரீ நேசகுமாரைப் பற்றி தூற்றியும் ஹிந்து மதத்தைப் பற்றி பல கேள்விகளைக் கேட்டும் திண்ணையில்(www.thinnai.com) எழுதிய பேராசிரியர் நாகூர் ரூமி அவர்கள், ஏதோ கல்லுரியில் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியராக இருக்கிறாரே என்ற ஆர்வ மிகுதியில், அவரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து அவரின் பிற எழுத்துக்களைப் படித்தேன். Quality யை எதிர்பார்த்த எனக்கு Quantity யை மட்டுமே கொடுத்த முரட்டுத் தனமாக எழுத்தைப் பற்றி வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை. அவருக்கு இலக்கிய திறன் மற்றும் தமிழறிவு குறைவு என்பதே என் கருதுகோள். அதற்கு ஆதாரமாக இம்மூன்று வாதங்களை வைக்கிறேன்; வாசகர்களே முடிவு செய்யட்டும்:

1) ஹோமரின் இலியட் - தமிழ் மொழி பெயர்ப்பு செய்திருந்தார். அப்புத்தகத்தில் அட்டையில் அச்சாகியிருந்த முகவுரை திண்ணையிலும் வெளியாகி இருந்தது http://www.thinnai.com/?module=displaystory&story_id=60703152&format=html. அதில் சற்று கீழ்த்தரமாக 'இராமன் அனுமனிடம் சீதையின் தோற்றத்தை விளக்கும் போது 'தேர்த்தட்டு போன்ற அல்குள் உடையவள்' என்று சீதையின் பிறப்புறுப்பை விவரித்ததாக சொல்லியிருந்தார். இராமாயணத்தில் வல்லுனரும், தமிழ் கவிஞருமான ஸ்ரீ ஹரி கிருஷ்ணனிடம் ஆச்சரியத்துடன், 'சீதை சிரித்தாள்' என்று கூட எழுதாமல் நாகரீகத்திற்கேற்ப மிகக் மென்மையாக 'குறுநகை பூத்தாள்' என்று எழுதும் துல்லியம் மிக்க கம்பனா இவ்வாறு பச்சையாக இராமர் அனுமனிடம் பேசுவதாக எழுதினார்?!' என்று கேட்டேன். அவர் எழுதிய பதிலைப் படித்ததில், பேராசிரியர் நாகூர் ரூமி அவர்கள் ஆழ்ந்த அறிவின்றி, குறைந்தபட்சம் தமிழ் அகராதியைக் கூடப் பார்க்காமல் அவரின் மனம்போன்று எழுதுகிறார் என்றே தெரிந்தது. ஹரி கிருஷ்ணன் எழுதிய விளக்கத்தை கீழே இந்தக் கட்டுரையின் முடிவில் இணைத்துள்ளேன். முத்தான விளக்கமான இதை வாசகர்கள் முதலில் படித்துப் பின்பு இக்கட்டுரையைத் தொடரவும்.


/முனைவர் பட்டத்துக்காக கம்பனைப் படித்தேன்....// -என்று பேராசிரியர் நாகூர் ரூமி சொல்லியிருக்கிறார். இப்படி அரைகுறையாகப் படித்து, ஆணில் அரையாகிய பெண்ணின் அரைக்கும் சில அங்குலம் குறைவாகவே சிந்தித்து, மேலும் நேசகுமாரைப் பேசியது போலவே கம்பனையும் தூற்றித்தான் முனைவர் பட்டம் வாங்கினாரா? அவர் முனைவர் பட்டம் வாங்கிய கம்பராமாயணத்திலேயே அவருக்கு இவ்வளவுதான் அறிவு என்றால், மற்றவற்றில் எப்படி தரம் இருக்கும்?
By the way, can Professor Nagoor Rumi reveal name of the supervisor, reviewer, college , University that awarded him the Doctorate? I suspect that would be an Islamic group.


2) அதே ஹோமரின் இலியட் - தமிழ் மொழி பெயர்ப்பில் கம்பனுக்குத் தாமரை மலரைத்தவிர வேறேதும் தெரியாது, //...கம்பனைப் பொறுத்தவரை தாமரை வெறும் கற்பனை சார்ந்த விஷமாகவே உள்ளது// என்றும் எழுதியிருந்தார். எனக்கென்னவோ நாகூர் ரூமிதான் கம்பனை மட்டுமல்ல, தாமரை மலரைக்கூட சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்னும் ஐயம் எழுகிறது.


நம் முன்னோர்கள் தாமரை என்பதன் வடிவத்தை மட்டுமே பார்க்கவில்லை, அதன் மணம், குணம் நுணுக்கமான பண்புகள் என்று உட்சென்று அறிந்திருந்தனர். அதை வெறும் வடிவமாகப் பார்த்தல் எப்படி அர்ஜுனன் கிருஷ்ண பகவானை
"பத்ம பத்ர விசாலாக்ஷ பத்மநாப சுரோத்தமா" என்று மரியாதை செய்திருக்க முடியும்? உருவத்தை மட்டுமே பார்த்தால் நெற்றியும், விழிகளும், மார்பும், வயிறும், பாதமும் எப்படி தாமரைக்கு இணையாக முடியும்? ஆகவே உவமை செய்யப்பட்டது உருவம் மட்டுமல்ல, உள்ளிருக்கும் குணமும்தான்.

கம்பன் மட்டுமின்றி திருவள்ளுவரும் தாமரை மலரையே அதிகம் பாடுகிறார். தாமரை என்பது முழுமையின் வடிவம். சித்தர்கள் யோக நிஷ்டையில் துரியத்தை உச்சியில் கவிழ்ந்து மலரும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாகக் (சகஸ்ராரச் சக்கரம்) கண்டனர். குண்டலினி சக்தி துரியத்தில் தாமரையாக மலரும் போது முகத்தில் தவவொளி மின்னும் என்றனர். 'அரவிந்தன்' என்று தாமரை போல் முகமலர்ந்த திருமால் போற்றப்படுகிறார்.

தாமரை மலர் ஹிருதயம் என்று ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ளது. சித்த வைத்தியமும், ஆயுர்வேதமும், யுனானியும் கூட தாமரையை இதயத்தை வலுவாக்கும் அருமருந்தாகச் சித்தரிக்கின்றன.

நான் வளர்ந்த கிராமத்திற்கு சென்ற போது, பெருமாள் கோவில் குளத்தில் தண்ணீர் முகர்ந்த பெண்மணியிடம் "குளத்தோட அந்தக்கரை சுத்தமாவேயில்லையே?" என்றேன். "அதான் தாமரை இருக்கில்ல... தண்ணி சுத்தமாத்தேன் இருக்கும்" என்றார் அவர். கிராமங்களில் தாமரையிருக்கும் குளத்து நீர் சுத்தமானது என்ற அனுமானம் உண்டு என்பதைப் புரிந்துகொண்டேன்.

புத்தர் அஷ்டதிக்தஹங்களை நிறைவு செய்யும்போது , "தாமரையைப் போல் வாழ்" என்றார். "சேற்றில் வளர்ந்தாலும் தூய்மையாய் இருக்கும் தாமரை போல் உங்கள் மனம் சுற்றுச்சூழல் எப்படி இருந்தாலும் தூய்மையாய் இருக்க வேண்டும்" என்றார்.

தாமரை தண்டினூடே நெடுக்குவாக்கில் ஐந்து துளைகள் இருக்கும். ஆனால் இலையோ துளைகளைத் தெரியாதவண்ணம் மூடி, ஐந்து துளைகளிலும் காற்று நிரம்பி இருப்பதால் மிதந்து தண்ணீரின் மேல் விரிந்து வளர்ந்து இருக்கும். 'ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து' என்றார் திருவள்ளுவர்; 'வெள்ளத்தனையது மலர்நீட்டம்' என்றும் சொல்கிறார். புது வெள்ளத்தில் மற்ற தாவரங்களெல்லாம் மூழ்க தாமரை மட்டும் தண்டில் ஐந்து துளைகளிலும் காற்றை அடக்குவதால் மேலோங்குகிறது. ஐந்தையும் அடக்கினால் உலகவாழ்க்கையில் அமிழ்ந்துபோகாமல் உயரலாம் என்பது தெளிவாகிறதல்லவா?


'மகிழினிது கந்தம்' என்கிறார் ஔவையார். தாமரைக்கு மகிழம்பூப் போல மயக்கும் வாசனையில்லை. சித்தாந்தத்தில் 'வாசனை' என்பதற்கு மணம் மட்டுமின்றி 'மனம்' என்றும் மனம் சம்பந்தப் பட்ட பிறவிக்குணம் என்றும் அர்த்தமும் உண்டு. 'படிப்பு வாசனையே இல்லாதவன்' என்றால் பிறவியிலேயே படிக்கும் குணம் இல்லாதவன் என்று அர்த்தம். என்ன செய்தாலும் பிறவிக் குணம் அற்றுப் போவதில்லை. மாமுனிவர்.. என்னதான் தவ வலிமையுடன் இருந்தாலும், பிறவிக் குணமான கோபத்தை வெல்ல இயலாததால் துர்வாசர் (கெட்ட பிறவிக் குணம் உள்ளவர்) என்றே அழைக்கப் பட்டார். மூன்று வெவ்வேறு மொழிகளானாலும் சம்ஸ்கிருத வார்த்தையான அர்த்தம், தமிழ் வார்த்தையான பொருள், இரண்டுக்குமே finance, value, meaning என்று ஆங்கிலத்திலும் எப்படி ஒரே அர்த்தம் இருக்கிறதோ அதுபோல, ஆங்கிலத்திலும் smell என்பதற்கும் வாசனைக்கு இருப்பது போல் 'instinct thought' எனப் பொருளுளிருப்பது வியப்பு. தாமரை போல் நம் விருப்பு, வெறுப்பு மற்றும் எல்லா வாசனைகளையும் துறந்தால் தாமரைபோலவே இறைவனை அடையலாம் . தவத்தில் ஈடுபட்டு ஆயிரம் இதழ் கொண்ட தாமரையான சகஸ்ராரத்தில் லயித்தவர், பிறவிக்குணமான வாசனைகளிலிருந்து விடுபட்டு லௌகீக நாட்டமின்றி இறைவனையே சார்ந்திடுவர் என்பதே தாமரை உணர்த்திடும் குறிப்பு.

பெண்டிர் ரோஜா, மல்லிகை போன்று தாமரையைச் சூடுவதில்லை; திருப்பாவையில் நான் பிறந்து மலர்ந்ததே இறைவனுக்காக என்கிறாள் ஆண்டாள்; தாமரையும் அப்படித்தான். ஆகவே, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியும் சூடாமல் இறைவனடி மட்டுமே சேரும் தாமரை, முழுமையான அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.பிறவி வாசனை உள்ள மலர்கள் மனிதர்களை அலங்கரிக்க, பிறவி வாசனையற்றதால் தாமரை இறைவனை மட்டுமே அடைகிறது. சங்கு, சக்கரம், கதை, வில்லுடன் தாமரையும் ஒரு கையில் இடம் பிடிக்கிறது.


தாமரை, நீரின் மேலேயே எப்போதும் இருந்தாலும், தாமரை இலையின் அடிப்பக்கம் பாசம் படிந்திருந்தாலும், இலையில் நீர் ஒட்டுவதில்லை. அதேபோல் மனிதனும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும், மக்களிடம் பாசம் காட்டினாலும் பற்றின்றி ஒட்டாமல் இறைவனை நினைத்து வாழ்ந்தால் 'அற்றது பற்றெனின் உற்றது வீடு' என்று இறைவனை அடையலாம். அதற்கான குறியீடே தாமரை மலர்.

இதையெல்லாம் மனதில் கொண்டு "பத்ம பத்ர விசாலாக்ஷ பத்மநாப சுரோத்தமா"  என்று சொல்லிப்பாருங்கள், அர்த்தம் புரியும்.

தாமரையும் ஐந்தடக்கி, அர்ப்பணித்து, பற்றற்று இறைவன் சூடும் பேரின்பத்தை அடைகிறது. ஆக்கிரமிப்பு குணமுடைய கூட்டத்துக்கு, பற்றின்றி இருக்கச் சொல்லும் தாமரை மலர்க் குறியீடு 'போரடிப்பதா'கவே தெரியும்.

மூதுரையில் ஔவையார்,

"நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்."

என்கிறார . தாமரையை நல்லாருக்குத்தான் பிடிக்குமாம்!! என்ன அதிசயம் பாருங்கள்!! நாகூர் ரூமி தனக்கு தாமரையையும் பிடிக்கவில்லை; கற்றாரான கம்பரையும் பிடிக்கவில்லை என்று அவரே சொல்லுகிறார்!!.

3) மறைந்த எழுத்தாளர் சுஜாதா நாகூர் ரூமியின் 'உமர் கய்யாம்' பாடல் மொழிபெயர்ப்பு பற்றி ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்'-ல் எழுதியிருந்தார். மு.வ. ரத்ன சுருக்கமாக 'விதியின் கை எழுதி எழுதி முற்செல்லும்' என்று அற்புத மொழியாக்கம் செய்திருந்ததை நாகூர் ரூமி முக்கி, முனகி, முடியாமல் ஏதோ எழுதியிருந்தார். இவர் எழுதியது தேவையற்ற மொழியாக்கம் என்றே சுஜாதா நாசூக்காகச் சொல்லியிருந்தார். அதற்குக் காரணம் இருக்கிறது. மு.வ வின் முதல் தர மொழியாக்கம் வந்தது போன நூற்றாண்டிலேயே. அதையே இப்போது நாகூர் ரூமி செய்தது மூன்றாந்தர மொழிபெயர்ப்பு. பாவம், மு.வ. வைப் பார்த்துக் கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியானார். பேராசிரியர் நாகூர் ரூமி எப்படியோ ஆகட்டும், இவரின் கீழ் படிக்கும் மாணவர்கள் என்ன ஆவார்கள்?

கவிஞர் ஹரி கிருஷ்ணன் எழுதிய விளக்கத்தின் பகுதி இது :
============================================================================

அல்குல் என்ற சொல்லுக்கு மூன்று பொருள் உண்டு.

1. side; 2. waist; 3. Pudendum muliebre

என்பது OTL அகராதி, சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் தரும் விளக்கம். (1) பக்கம், (2) அரை (இடையை அடுத்த பகுதி) (3) பெண் பிறப்புறப்பு.

இதில் என்ன வேதனை என்றால், தமிழிலக்கியத்தில் எந்த இடத்தில் அல்குல் என்ற சொல்லைப் பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக எல்லோரும் மூன்றாவது பொருளை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறார்கள்.

உவமை சொல்கிறார்களே, அதில் ஏதாவது ஒன்று இந்த மூன்றாவது பொருளுடன் ஒத்துப் போகிறதா? புற்றரவல்குல். அது என்ன பாம்பு படம் எடுத்த மாதிரியா இருக்கிறது? தேர்த்தட்டு அல்குல். தேர்த்தட்டு என்ன வடிவத்தில் இருக்கும்? இந்தப் புற்றரவல்குல், பரவையன்ன அல்குல் (பரவை=கடல்) எல்லாம் எதைக் குறிக்கின்றன? கொஞ்சம் ஆங்கிலத்தைத் தொட்டுக் கொள்வோம். ஆங்கிலத்தில் hip என்றும் waist என்றும் சொல்கிறோம். இரண்டும் interchangeable ஆகப் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டுக்கும் ஒரே பொருள் இல்லை. hip என்றால் என்ன?

side of body below waist: the area on each side of the body between the waist and the thigh

என்பது Encarta தரும் விளக்கம். அதாவது வெய்ஸ்ட்டுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடம் ஹிப். அப்படியானால் வெய்ஸ்ட் என்பது என்ன?

The narrowing of the body between the ribs and hips (வேர்ட்வெப் அகராதி)

body area between ribs and hips: the part of the human trunk between the rib cage and the hips, usually narrower than the rest of the trunk (என்கார்ட்டா அகராதி)

உடலில் குறுகிவரும் இடம் எதுவோ அது வெய்ஸ்ட். ஆகவேதான் ஆங்கிலத்தில் slender waist உண்டு, slender hip கிடையாது. உடலின் அந்தப் பகுதியை flaring hip என்று சொல்லவேண்டும்.

உடல் குறுகி, பிறகு சரேலென்று விரிகிறது அல்லவா அந்தப் பகுதி ஹிப். குறுகி இருக்கும் இடம் வெய்ஸ்ட்.

சரி. இங்கிலிபீஸ் எல்லாம் எதுக்கு என்று கேட்கிறீர்கள். அதுதானே? எது ஆங்கிலத்தில் வெய்ஸ்ட் என்று சொல்லப்படுகிறதோ அது இடை. 'பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்'அப்படின்னும், இருக்கிறதோ இல்லையோ என்றெல்லாமும் கவிஞர்கள் பாடுகிறார்களே அதுதான் இது.

எதை ஆங்கிலத்தில் ஹிப் என்று சொல்கிறார்களோ அது தமிழில் அரை என்றும் அல்குல் என்றும் சொல்லப்படுகிறது. That portion which flares up after the point where body had narrowed down.

இப்படி விரியும் இடத்துக்கு மட்டுமே தேர்த்தட்டு, புற்றரவு போன்ற உவமைகள் பொருந்துகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். The outline of a cobra raising its hood resembles half of an hour-glass. தேர்த்தட்டு என்பதும் அப்படித்தான் தேரில் விரிந்து இருக்கும் இடம். இந்த உவமைகள் எதைக் குறிக்கின்றன? அரை (இடைக்குக் கீழே, பக்கங்களில் (not directly below) விரியும் பகுதியை. நிச்சயமாக பிறப்புறுப்பை அன்று.

இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை என்றால்,"கவைத்தாம்பு தொடுத்த காழூன்று அல்குல்"என்று பெரும்பாணாற்றுப்படை சொல்வது எதனை என்று விளக்கவேண்டும். "1 கவைத்தாம்பு slip-knot, noose" என்பது ஓடிஎல் தரும் விளக்கம். (ஆடையின்) முடிச்சு போடப்பட்டு உள்ள அல்குல் என்று பெரும்பாணாற்றப்படை சொல்கிறது. பாவாடையின் முடிச்சை எங்கே போடுவார்கள்?

சரி போகட்டும். "பூந்துகில்சேர் அல்குல் காமர்எழில் விழலுடுத்து" அப்படின்னு திவ்யப் பிரபந்தம் பேசுகிறது. அல்குலைச் சுற்றிலும் பூந்துகில் உடுத்தப்பட்டிருக்கிறது என்று இந்த வரி சொல்லுகிறது. என்னாங்க, மென்மையான துணியை எந்த அல்குலைச் சுற்றி உடுத்துவாங்க?

சரி. அதுவும் வேணாம். பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு பாடுகிறார் அல்லவா, அங்க வாங்க:

இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே.

முலையுண்ண வா என்று குழந்தையைத் தாய் அழைக்கிறாள். 'அப்பா, கொழந்தே, ஓடிவாடா என் கண்ணா, வந்து என் அல்குல் மேல ஏறிக்கோ. மார்பில் பால் அருந்து' என்று சொல்கின்றாள். பால் குடிக்கத் தன் குழந்தையை வந்து ஏறி அமரச் சொல்லும் தாய் எந்த இடத்தில் அமரச் சொல்வாள்? இடை குறுகியபின், விரியத் தொடங்கும் அந்த இடத்திலா அல்லது வேறெங்காவதா?
.....
============================================================

கார்கில் ஜெய்.

5 comments:

Sri Srinivasan V said...

Thank you,
Great Insight.
Thanks for sharing.
Anbudan,
srinivasan.

sivyanamaha said...

arumaiyan vilakangal

sivyanamaha said...

arumaiyana vikangal

Unknown said...

Excellent explanation... this should definitely slab Nagoor Rumi.... ask that person speak in public like this, and see what happens...

kargil Jay said...

Sivayanamaha, Krish Googol,

Thank you for your appreciations :-D..

That guy Nagoor Rumi stopped writing in thinnai.com after my rebuttal.