Wednesday, October 15, 2025

நாகையநல்லூர் சமையல்காரன்

நாகையநல்லூர் சமையல்காரன்
======================
அது 2000த்துக்கு முன்பு. அப்போது வேலையில் சம்பாதித்த 2ம் மாதம். முதல் மாதம் அம்மாவுக்கு புடவை. ரெண்டாம் மாதம் சம்பளத்தில் காலேஜ் ஜுனியர் சங்கருக்கு ட்ரீட். சும்மாவா? ஒரு செமெஸ்டர் முழுக்க அவன் ரூமில் ப்ரீயாகத் தங்க இடம் கொடுத்தவன். ஜீன்ஸ் பேண்டும், டீ சர்ட்டும் வாங்கிக்கொண்டு அண்ணா பல்கலை, கிண்டிக்கு சென்றேன். காந்தி மண்டபத்தில் பஸ் இறங்கி யுனிவர்சிட்டி வாயிலில் நுழைந்து தென்மேற்காக நூலகத்தையும் தண்ணீரே கண்டிராத நீச்சல் குளத்தையும் தாண்டி  நடந்தால் ஹாஸ்டல்தான். அவனை சந்தித்தேன். அவன் சொன்னதுதான் "நாகையநல்லூர் சமையல்காரன்".
சங்கரா, இப்போ எல்லாம் ஹாஸ்டல் மெஸ்ல சாப்பாடு எப்படி இருக்குது? என்றேன்.
"வழக்கம் போலத்தான். நடுவில ஒரு மாசம் சூப்பர் டேஸ்ட் இருந்தது. மறுபடியும் சகிக்கல".
உயர்ந்து வளர்ந்திருந்த தூங்குமூஞ்சி மரங்களின் நிழலில் நடக்க ஆரம்பித்தோம்.. பேச்சும் தொடர்ந்தது.. "ம்ம்..ஒரு மாசம் மட்டுமா? எப்படி?"
நாகையநல்லூர்லேர்ந்து ஒரு சமையல் காரன் வந்திருந்தான். அய்யரு போலிருக்கு... யப்பா... என்ன ஜாலம் பண்ணினானோ தெரியல.. தோசைல தங்க நிறத்துல வெந்தய வாசனை மணக்கும்.. அதுமாதிரி சாம்பார் நான் யுனிவர்சிட்டில  சேர்ந்ததில் இருந்து சாப்பிட்டதே இல்லை.. .. ரசம் தேவலோகத்துலேர்ந்து வந்தா மாதிரி.. தனித்தனியா கருவேப்பிலை, மஞ்சள், கொத்தமல்லி, பெருங்காயம்னு மணக்கும்ங்க... .தனித்தனியான்றேன்..... தனித்தனியா வாசனை தெரியும்....என்ன பண்ணினான்னே தெரியல.. அவன் கைல பத்து விரலுக்கும் மோதிரம் போடணும்.. அவன் சொர்கதுலேர்ந்து வந்தவனுங்க..
சொர்க்கத்துலேர்ந்தா? நாகையநல்லூர்னியே?
நீங்க வேற கடிக்காதீங்க.. சொல்றதை கேளுங்க.. எல்லா ஐட்டமும் செம டெஸ்ட்.. நான்லாம் ஹாஸ்டல் மெஸ்ல ரெண்டு தோசை மேல கருமத்தை தின்ன மாட்டேன்.. அதுவும் எத்தையாவது தின்னு தொலைக்கணுமேன்னு தின்னுட்டு கெளம்பிருவேன். நாகையநல்லூர் அய்யர் கை டேஸ்ட்ல நாலு தின்னேன்.. தோசைன்னு இல்ல, உப்புமா, பொங்கல், பொரியல் எதெடுத்தாலும் சான்ஸே இல்ல.. சப்பாத்தியோட தக்காளி கடலை மாவு சப்ஜி.... கத்திரிக்கா பயத்தம் சாம்பார், செய்வாம் பாருங்க... இட்லி புடிக்காத நானே தொட்டுக்கிட்டு ஆறு தின்னேன்...
"அந்த ஆளுக்கு ஏதாவது பிரமோஷன் கொடுத்தாங்களா?" என்றேன். பழக்கமான நாய் ஓடி வந்து வாலாட்டியது. போன வருஷம் நாய் போட்டிருந்த குட்டிகள் இப்போது பெரிதாக வளர்ந்து இருந்தன. அவை தூரத்தில் நின்று சந்தேகத்தோடு வாலாட்டின.
பிரமோஷனா? கிழிச்சானுங்க.. தலை கீழா நடந்தது.. நீங்க குறுக்க பேசாமே கேளுங்க ஜெய்...
சூப்பர் டேஸ்ட்னால பசங்க எல்லாரும் உட்காந்து கார்த்தாலை 9 வரைக்கும் சாப்ட்டானுங்களா.. .. மெஸ் வெளில கியூ வெயிட்டிங்.. கிளாஸுக்கு லேட் ஆச்சு.. எப்பவும் மெஸ் பில்லு அறுநூறு ரூவாதான் வரும்.. அந்த மாசம் மளிகை சாமான் அதிகமாகி எழுநூத்தி நாப்பது வந்தது..
வார்டன் சாம்ராஜ் மெஸ்சுக்கே வந்தாரு.. அய்யரை கூப்புட்டு "எலேய் என்ன பெரிய மயிராட்டம் சமக்கியாமா?.. உனக்கு முன்னாடி இருந்தவங்க சமைக்கா மாதிரி நீயும் பண்ணுலே.. எல்லாருக்கும் ரெட்டை சோலி வெக்கியாம்"
"சார், அவா தட்டெல்லாம் சுத்தமா அலம்பறது இல்லே.. சாதம் சமைக்கற பாத்திரத்துலயே எச்சைதட்டெல்லாம் போட்டுடறா. சுண்ணாம்பு பவுடர்லாம் கலக்கறா.. அப்படி பண்ணினா ஸ்டுடென்ட்ஸ் வயிறுகெட்டுடும் சார்..கொஞ்சம் சாப்பிட்டாலே எழுந்துடுவா". "எலேய் பசங்க இங்க படிக்க வர்றாங்களா இல்லை தின்னுட்டு பேள வர்ரானுங்களா? பசங்க பத்து நிமிஷம் மேல சாப்பிடக்கூடாதுன்னு தானே சொல்றோம். குனுக்கு வலிக்க சமைச்சா பத்தாதுலே.. புத்தி வேணும்" ன்னு ஆரம்பிச்சு ரொம்ப மரியாதை இல்லாம பேசிட்டாரு. அய்யர் "என் தோப்பனார் சொல்லி குடுத்த வித்தையை கடமை தவறாம செய்யறேன்.. யாரும் 10 வருஷமா குத்தம் சொல்லலை.. நீங்கோ மட்டும் ஏன் சார் கோவிச்சுக்கறேள்?" னு கேட்டார். "ஏலேய், நான் சொல்லுதது உனக்கு விளங்குதா இல்லையா? ஒன் அப்பன் வித்தை மயித்தை சொல்லிக் கொடுத்தான்குற ..ஒன் அப்பனா ஒரு ஸ்டுடென்ட்டுக்கு 140 ரூவா அதிகமா கட்டுவான்?.." அய்யருக்கு கண்லாம் கலங்கி போச்சு... குரலுடைய "ஸார் அவன் இவன்லாம் போயிட்டவாள பத்தி பேசாதேள்.. ஜட்ஜ், கலெக்டர் வீட்டுக்கெல்லாம் கூட போயி சமைச்சிருக்கேன் , யாரும் இப்படி பேசினதில்ல".
கண்ணீரைப் பார்த்து இறங்கின வார்டன் சொன்னாரு "கேளுவே, சமையல்ல டேஸ்ட் இருக்க கூடாது, பசங்களுக்கு சாப்பிடவே பிடிக்க கூடாது, 330 பேரு 12 லேர்ந்து 1க்குள்ள லன்ச் முடிக்கணுமில்லா? வந்தான்ன்னா சாப்புட்டு ருசியே இல்லை கருமம்ன்னுட்டு அஞ்சே நிமிசத்தில வெளில போயிரணும்.. அப்போதாம்வே நம்ம ரிசர்வ்ல நாலு காசு மிஞ்சும்..ஆடிட் பிரச்சனை வராது...நீ நல்லா சமைச்சு ஸ்டுடென்ட்ஸ் தின்னுட்டு தெனவெடுத்துப் போயி இருந்தாம்னா படிக்க மாட்டானுவ..கலாட்டா செய்வானுங்க.. "
"ஸார், என் தொழில் தர்மத்தை, கத்துண்ட வித்தையை மீற மாட்டேன் சார், கைப்பக்குவம்லாம் பகவான் பரம்பரையா அனுக்ரஹம் பண்ணினது. இங்க படிக்கற பசங்க எல்லாம் சரஸ்வதி கடாட்சத்துக்காக பெத்த அம்மா சமையலை விட்டுட்டு வர்றா; எங்கெங்கேர்ந்தோ வந்து படிக்கற குழந்தேள் கிட்டேர்ந்து சுபோஜனத்தை பறிக்கப்படாது.. நான் கடமையை விடாம சரியாத்தான் செய்வேன்.. வேணும்னே மட்டமால்லாம் சமையல் செய்ய என்னால முடியாது.. "
"அப்புடியா ஸார்வாள்.... பாப்பன்ற திமிரு போல... அப்போ நீ தட்டு கழுவுலே.. இனி எச்சை தட்டு எடுத்து தட்டு டேபிள்லேர்ந்து எடுக்கறது, களுவறதுதாம்லே உன் வேலை. இன்னிலேர்ந்து சமையலை ஏளுமலை , இசக்கி பாத்துப்பானுவ"..
மறுபடியும் நான் பேசினேன்...ஏன் சங்கர், எதுக்கு முதல்ல அந்த அய்யரு நம்ம ஹாஸ்டலுக்கு வந்தான்? அசிங்கப் படறான்? எதுக்கு இவ்ளோ கடமையுணர்ச்சி, தொழில் தர்மம் பொருத்தமில்லாத இடத்துல?
சங்கர் பேச்சில் மாற்றம் தெரிந்தது. சமையல் காரனை அவர் என்றும் வார்டனை அவன் என்றும் சொல்லிப் பேச ஆரம்பித்தான்.
நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் போயி வார்டன் கிட்ட பேசினோம்.கொஞ்சமும் மசியலை . "நீ ருசிக்காக 140 அதிகம் கொடுப்பே. மத்தம 330 பசங்களுக்கும் சேத்து நீ 46,000 கொடுப்பியாவே? ஒவ்வொருத்தனும் 1 மணி நேரம் சாப்பிடுதான்..எல்லாரும் உக்காந்து மொக்கின அப்புறம் கடைசி ஆளா நீ சாப்பிடணும். செய்வியா?"ன்னான். அப்புறம் அய்யர் கிட்ட போனோம். என்னய்யா ஜட்ஜ், கலெக்டர்ங்கற என்னத்துக்கு கம்மி சம்பளத்துக்கு இங்க ஹாஸ்டல் கேன்டீன்ல சமைக்கறீரு ன்னோம் . அப்போதான் உண்மையான கதை தெரிஞ்சது... அய்யரோட அம்மாவுக்கு உணவுகுழாய்ல கேன்சராம்.. அது தெரியாம 6 மாசம் வீட்டுல வேலைக்கு போவாம அம்மாவை கவனிச்சுகிட்டு இருந்திருக்கார். அப்புறம் இப்போ கிண்டி கேன்ஸர் இன்ஸ்டிடியூட்ல அட்மிட் பண்ணிட்டு, தொண்டைல டியூப் வச்சு தான் ஆகாரம். தங்க இடம் இல்ல, லாட்ஜுக்கு பணம் இல்ல.. என்ன பண்ணுறதுன்னு யோசிச்சு தூங்க எடத்துக்காகவே பக்கத்துலேயே நம்ம ஹாஸ்டல் மெஸ்ல வேலைக்கு சேந்துட்டார்.. அப்படியே ஹாஸ்டல்லயே ஓரமா வாட்ச் மேனோட தங்கிக்கலாம்னு பிளான் பண்ணிருக்கார்... வீட்டு வாடகை, ஆட்டோ சார்ஜ் மிச்சம். அதனாலதான் குறைஞ்ச சம்பளம், அவமானம், கடுமையான வேலையெல்லாம் தாங்கிகிட்டு இங்கயே கெடந்தார்.
அவரே இதெல்லாம் சொன்னாரா?
ஆமாம்.. ஆனா அவரோட தொழில் தர்ம உணர்ச்சி, அவரை நிம்மதியா இருக்க விடல. எதுக்கு அய்யரோட கடமை உணர்வை திட்டனும்? திட்டினாலும் இந்த வார்டனைத்தான் திட்டனும்.. அப்படியே இந்த எச்சைப் பாத்திரம், தட்டு எல்லாம் கழுவிட்டு இருந்தார் அய்யர்; வேலைய முடிச்சுட்டு ரெண்டரை மூணு வாக்குல அம்மாவப் பார்க்க கேன்ஸர் இன்ஸ்டிடியூட் போவாரு.. போவரத்துக்கு நான் என்னோட சைக்கிளை கூட கொடுத்திருந்தேன்... அப்புறம் ஆறரைக்கு திரும்ப வந்து வேலை செய்வார்.. ஆனாலும் ரெண்டு மாசம் கழிச்சு வார்டன் வார்டன் விடல...
ஞாயிறு காத்தால சர்ச்சுக்கு போக டிரஸ் பண்ணிட்டு கார் எடுத்துட்டு குடும்பத்தோட வந்தான். ஆம்பிளைங்க ஹாஸ்டலுக்கு பொண்டாட்டியோட இது வரைக்கும் வந்ததே இல்லை. நாங்க எல்லாம் வார்டன் குழந்தையை தூக்கி கொஞ்சிட்டு இருந்தோம். "அய்யிரே, இனிமேலாவது மத்தவன் மாதிரி சமைப்பியாலே?" "ஸார், என் உயிரே போனாலும் உத்யோக தர்மத்தை மீறமாட்டேன்". "ஒண்ணு பண்ணுவே..ருசியா சமைக்க வேணும்னா எங்க சாந்தோம் சர்ச்சுல வந்து வக்கணையா, ருசியா சமைச்சு போடு.. என் வைஃப்தான் சர்ச்சுல செகரட்டரி; பாஸ்டர்கிட்ட பேசி உனக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்லே". "மன்னிக்கணும் சார். நளனும், பீமனும் பண்ணின கலையை சரஸ்வதி கடாட்சம் உள்ள இடம்கறதால இங்க பண்றேன், சர்ச்சலெல்லாம் பண்றதுக்கில்லை ஸார்.. நான் எச்சை தட்டே அலம்பிண்டிருந்தாலும் பரவாயில்லை". வார்டனின் மனைவி குழந்தையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு கிடுகிடுவென காரில் சென்று அமர்ந்தார். ஒரு சாதாரண சமையல் கலைஞனின் முன் தன் கணவனின் பணம், பெரும்படிப்பு, பதவி, அந்தஸ்து எல்லாமே தோற்றதை தாங்க முடியவில்லை.
"எதுக்குய்யா மூஞ்சில அடிச்சாப்பல பேசின? படிப்புக்கு மரியாதை தரவேணாம்?"
"இல்லே..அன்னிக்கு என் தோப்பனாரை அவன் இவன்னு பேசினது மனசுல முள்ளாத் தச்சுட்டு இருந்தது"
"அந்தாளே ஒரு சாடிஸ்ட்டு.. என்ன பண்ணுவாரோ?"
"இப்பவே ரொம்ப மோசாமாதான் இருக்கேன். இதைவிட மோசமா என்ன பண்ணிட முடியும்?ன்னுதான்".
வார்டனால் முடிந்தது. 'ஏண்டா சர்ச்சல சமைக்க மாட்டியா? பெரிய ஜில்லா கலெக்டரா நீ?' ன்னு கருவிகிட்டு கிடந்த வார்டன், வேணுமுன்னே அய்யரை நான்வெஜ் மெஸ்ஸுக்கு மாத்திவிட்டான்.. வெஜ் மெஸ்ஸுல சாப்பிடக்கூட அவருக்கு அனுமதி இல்லைன்னுப்புட்டான் படுபாவி.. அய்யரை சிக்கன் சாப்பிட்ட தட்டெல்லாம் எலும்பு பொருக்கி கழுவ சொன்னான்..
அய்யோ... சே... அப்புறம் என்னாச்சு? அன்னிக்கே வேலையவுட்டு போயிட்டாரா?

இல்ல, இசக்கி, ஏழுமலைக்கிட்ட பேசி மார்னிங் ஷிப்ட் மாத்திட்டாரு. 
மதியம், ராத்திரில மட்டும்தானே நான்வெஜ்?   
ஆனா கார்த்தால டிபன் எப்பவும் சைவம் தான?. நடுராத்திரி 12 மணிக்கு காய்கறி நறுக்கி, மாவரைச்சு வச்சுட்டு வருவார். மறுபடியும் விடிகாலை சமைக்க போயிடுவார். 
அம்மாவுக்கு குணம் ஆகிற வரைக்கும் என்ன கேவலப்பட்டாலும் போமாட்டேன்னுட்டார். நான்வெஜ் மெஸ்ஸில் அய்யரால சாப்பிட முடியாது. கார்த்தால டிபன் மட்டும் சாப்பிடுவார்; மதியம், ராத்திரி சாப்பாடு இல்லை; தூக்கமும் இல்லை; திறமைக்கு மரியாதை இல்லை; நல்ல சம்பளமும் இல்லை; அஞ்சு நிமிஷம் ஓய்வில்லை. கடமையை மட்டும் தவறாம செஞ்சார். .. அய்யரு பாட்டுக்கு சமாளிச்சுட்டாரு,  கஷ்டப்பட்டா மாதிரி தெரியலைங்கிறதுனால  வார்டனுக்கு பழி வாங்கின திருப்தி கிடைக்கல..காத்துட்டு இருந்திருக்கான்..
அப்படியே ஒரு மாசம் ஓடிச்சு..சாப்பிடாம இளைச்சு பூட்டாரு அய்யரு. அன்னிக்கு டிஸ்க்ரீட் மாதேமட்டிக்ஸ் பரீட்சைக்கு படிசுட்டு இருந்தோம். போயி டீ சாப்பிடலாம்னு கேண்டீனுக்கு போனோம்.. அங்க பார்த்தா கேண்டீனுக்கு சாம்ராஜ் கூட ரேடியேஷனல் பிஸிக்ஸ் பைனல் இயர் படிக்குற ஜெனிதாவோட அண்ணன் கையில கல்யாணப் பத்திரிகையோட வந்திருந்தார். அவரு போலீஸ் இன்ஸ்பெக்டராம். ஜெனிதாவுக்கு கல்யாணம், அதனால 10 நாள் தள்ளி, கல்யாணம் முடிஞ்ச அப்புறம் பிராஜக்ட் வைவா வோஸ் வைங்கன்னு கேட்டாரு. அதெல்லாம் முடியாதுன்னு முதல்ல சொன்ன சாம்ராஜ், இங்க ஒரு சமையல் காரப்பய இருக்கான்,ரொம்ப பிரச்சனை பன்றான், அவனை ஏதாவது செய்யணும்னு சொன்னான்.  ஜெனிதாவோட அண்ணன் "சார் கல்யாணம் முடியட்டும்.. மே நாலாம் தேதி அவனை ஹாஸ்டல்ல சைக்கிள் திருடிட்டான்னு சொல்லி கைய, காலை உடைச்சிடுறேன்" னு சொன்னான். படுபாவிங்க ரெண்டு பேரும் கைகொடுத்துட்டு போயிட்டாங்க. இதைக்கேட்ட எங்களுக்கு பக்குன்னு ஆயிப்போச்சு. இதை வெளில சொன்னா எங்களுக்கும் ஆபத்து. சொல்லலைன்னா அய்யரு ஜெயிலுக்கு போவாரு.. என்ன செய்யலாம்?

அய்யரு மாவரைச்சு, பாத்திரமெல்லாம் தேய்ச்சு, தட்டெல்லாம் அலம்பி வச்சுட்டு ஹாஸ்டலுக்கு படுத்துக்க ராத்திரி 12 மணிக்கு வந்தார். நாங்க எல்லாரும் ஆளுக்கு 5 ரூபாய் போட்டு 80 ரூபாய் சேர்த்து கொடுத்தோம். ஏன்னு சொல்லாம, "அண்ணே விடிகாத்தால நீங்க சொல்லாம கொள்ளாம நீங்க கிளம்பிடுங்க, இந்த காலேஜ் ஓத்துவராது"ன்னு சொன்னோம். அவரு கண் கலங்கி பணத்தை வாங்கிக்கிட்டாரு. பையிலிருந்து ஒரு சாமி படத்தை எடுத்தாரு. சிருங்கேரி அம்மனாம். "அம்மா சாரதாம்பா.. கண் தெறந்து பாறேன்.. நான் இன்னும் உயிரோடதான் இருக்கணுமா? அம்மா கண் திறம்மா" ன்னு குலுங்கிக் குலுங்கி அழுதார். அப்படியே குளிச்சுப்புட்டு மொட்டைமாடிக்கு போயி நிலாவை வெறிச்சுப் பார்த்துட்டே தூங்கிட்டார். எங்களுக்கு மெல்லவும் முடியல, முழுங்கவும் முடியல. டென்ஷன்லயே ஒரு வாரம் ஓடிச்சு.. அடுத்த வாரம், அன்னிக்கு மே 1 லீவு.. வார்டன் அவனோட சைக்கிளை கொண்டுவந்து ஹாஸ்டல்ல நிறுத்தினான். 
இன்னும் மூணு நாள்ல போலீஸ் வரப்போவுது.. 
சங்கரிடம் நான் எதுவும் கேட்கக் கூட தோணவில்லை. கொஞ்ச நேரம் மயான அமைதி.. பெரு மூச்சு.. சங்கரே தொடர்ந்தான்.
ஆனா நல்லவேளை அன்னிக்கே  அம்மா கண் திறந்துட்டா...வழி விட்டுட்டா..
சாராதாம்பாளா?
இல்லை. அய்யரோட அம்மா... கேன்ஸர் இன்ஸ்டிடியூட்ல இறந்துட்டாங்க. அவரு பாடிய எடுத்துட்டு ஊருக்கு போயிட்டாரு.
-*-*-*-*-*-*-*-*-*-*-*-

இது நடந்து 25 வருடங்கள் ஆகின்றன. பல்கலை மாணவர்கள் வெள்ளிவிழாச் சந்திப்புக்கு (college reunion) வந்த நானும் சங்கரும் நாகையநல்லூர் செல்ல முடிவெடுத்தோம். அவர் ஹாஸ்டலுக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்தில் இருந்து சங்கர் முகவரி சேகரித்திருந்தான்.

அக்ரஹாரத்தில் விசாரித்ததில் ஒருவர் “நீங்களும் போலீசா? இப்போதான் ஒருத்தர் தேடிட்டு வந்தாரு.. பஜனை மடத்துலேர்ந்து ஆறாவது வீடு.. இந்த பழைய நெம்பர்லாம் செல்லாது….” என்றார்.

எப்படியோ தேடி வீட்டைக் கண்டுபிடித்தோம். பாசிபடர்ந்த சுவரில் அகல் விளக்குக்கான பிறையில் காரை பெயர்ந்து இருந்தது. வளைந்து கொடுக்கா நேர்மையின் விளைவு, வீட்டின் ஏழ்மையில் தெரிந்தது.

உள்ளே ஒரு போலீஸ்காரர், அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

எங்களை “நீங்க யாரு? எதுக்கு வந்தீங்க” என்றார் போலீஸ்.

அய்யர் பதில் சொன்னார்: “இவரு அண்ணா காலேஜ்ல நான் கேன்டீன்ல வேலை செய்யறச்சே படிச்சார்” என்று சங்கரைக் காட்டி .. “இவரு அவரோட சிநேகிதர் போலிருக்கு” என்று என்னைக் காட்டினார்.

பதற்றத்தோடு “ஸார் ஏன் சார்? எதாவது பிரச்னையா சார்?” என்று போலீசிடம் கேட்டேன்.

“இல்லல்ல… இவரோட பொண்ணு அமெரிக்கால படிச்சுட்டு இருக்கு.. இவரும் அமெரிக்கா போகப் போறாரு.. பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக வந்தேன்”.

“சாராதாம்பா கண்ணைத் திறந்துட்டாடா” – கண் கலங்கினேன்.

Thursday, August 28, 2025

இயேசு என்னும் கிருஷ்ண பக்தர்

part - A . மொழியியல் தொடர்பு ஆராய்ச்சி :
======================================
கிரேக்க வரலாற்று ஆசிரியர் மெகஸ்தனிஸ் எழுதினார்: "கேஞ்சஸ் கரையில் மன்னன் நந்தஸ் 80,000 எலபஸ் வைத்துள்ளதாக மன்னன் போரஸ் சொன்னதால் பேரரசர் அலெக்ஸ்சாண்டர் திரும்பிவிட்டார்..... 5 வருடம் முடிவதற்குள் கௌடில்யஸ் என்னும் ராஜதந்திரி அறிவுரைப்படி சந்திரகோட்டஸ் எங்கள் மேல் படையெடுத்து வந்து பெர்சியா வரை அலெக்ஸ்சாண்டர் ஜெயித்த எல்லாவற்றையும் வென்றுவிட்டான். தளபதி செல்யூகஸ் நிகேட்டாரைத் தோற்கடித்து உடன்படிக்கை செய்துகொள்ள வைத்தான். அமைதியை நிரந்தரப்படுத்த 500 எலபஸ், தங்க நாணயங்கள் கொடுத்துவிட்டு செல்யூகஸ் நிகேடரின் தங்கையை மணம் முடிந்து சொந்த பந்தமாக்கிக் கொண்டான். " கேஞ்சஸ் - கங்கை நதி; நந்தஸ் - நந்தன்; எலபஸ் - எலும்புள்ளது ( எலபான்டஸ் ) - தந்தம் உள்ள போர் யானைகள். போரஸ் -- மன்னன் புரு (புருஷோத்தமன்); கௌடில்யஸ் - கௌடில்யன் - சாணக்கியன் சந்திரகோட்டஸ் - சந்திரகுப்தன் - பேரரசர் சந்திரகுப்தர் ஆம், அப்படிதான் செல்யூகஸ் நிகேடார் சாசனத்தில் எழுதினான். அப்படியேதான் மெகஸ்தனீஸ் வரலாற்றுக் குறிப்பெடுத்துக்கொண்டான். புராதன ஐரோப்பிய மொழிபெயர்ப்பில் (கிரேக்கம், லத்தீனம், ஹீப்ரு, இயேசு பேசிய அராமிக்) கங்கை - கேஞ்சஸ் ஆனது. கௌடில்யா - கௌடில்யஸ் ஆனார். புரு - போரஸ் ஆனான். சந்திரகுப்தன் - சந்திரகோட்டஸ் ஆனான். சூர்யா(சூர்யன்) - சூயஸ் ( zeus - sun god கிரேக்க சூரியக் கடவுள்) தர்மன் - தமோஸ் இவை அனைத்துமே கிமு விலேயே எழுதப்பட்ட மொழியாக்கங்கள். அதாவது இயேசு பிறப்பதற்கு/கதைக்கு முன்பே. ஒரு விஷயம் கவனியுங்கள், மேலுள்ள பெயர்கள் எல்லாம் "ஸ்" ல் முடிவதை. இவை மட்டுமல்ல பல கிரேக்க, யூதேய, ரோமானியப் ஆண் பெயர்கள் "இஸ்" ல் முடியும். சாக்ரடீஸ், மார்கஸ், ஜுயஸ், ஹெர்மிஸ், ப்ரூட்டஸ், அரேலியஸ், அர்கீமிடிஸ், அக்கிலீஸ் எல்லாமே ஆண். (அல்லது ஆண் பெயர்கள் "ஆர்" ல் முடியும்.. சீசர், ஹெய்க்டார், அலெசாண்டர் எனப்பல) . பெண்கள் பெயர் "ஆ"வில் முடியும். அலெக்ஸா,சான்ரா, மோனா,லிசா,எரிகா,கிளியோபாட்ரா,கிளாரா,கிளாரிடா(என்றால் குட்டி கிளாரா என்று பொருள் - நம்மூர் குட்டி ராதிகா மாதிரி),மாயா and so on . (*ஆங்கிலோ சாக்ஸன் மொழிபெயர்ப்பு வேறு; புராதன கிரேக்க மொழிபெயர்ப்பு வேறு). ஒருமுறை காஞ்சீபுரம் மகாபெரியவா வேதத்தை குறிப்பிட்ட த்வனி, உச்சரிப்பில் மாற்றிப் பாடச்சொல்லி வந்திருந்த யூதர்கள் அவர்களின் புனித நூலான தோரா போன்றிருக்கிறது என்று அசந்து போயினராம். ( இஸ்லாம் - குரான், கிறித்தவம் -பைபிள், யூதம் - தோரா ). பொதுவாக கிறித்தவர்கள் முஸ்லிம்களுடன் கலந்தொழுகும் போது, போலியாக "நாமெல்லாம் ஒன்றே. ஆப்ரகாம் - இபுறாகீம், David - Dawood ஆக மாறியது. ஜோசப் - யூசுஃப் ஆனது. நாமெல்லாம் சகோதரர்கள்" என்று சொல்வார்கள். அவர்களிடம் கேளுங்கள் இஸ்மாயில், ஆயத்துல்லா, ஆபெல், ஜான், எல்லாம் எப்படி ஆனது என்று. பதிலிருக்காது. இதுதான் உண்மை: தோராவில் மன்னன் அபிராகாஹாமின் மகன்கள் இசாக், இஸ்மேல். ராணி சாராக்கு பிறந்தவன் இசாக், அவனுக்கு யூதேயாவை கொடுத்த ஆபிரஹாம், வைப்பாட்டி ஹாகருக்கு பிறந்ததால் இஸ்மேல் லுக்கு அரேபிய பகுதிகளைக் கொடுத்து வெளியேற்றுகிறான். இஸ்மேல் தான் குரானில் இஸ்மாயில் என்னும் முஸ்லீம் பெயரானது. யூத மதத்தில் இருந்து ஆபிரகாமின் காரணமாக இரண்டாக்கப் பிரிந்து கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் ஆனதால் இம்மூன்றும் ஆபிரகாமிய மதங்கள் எனப்படுகின்றன. குரானின் படி இயேசு - "ஈஸா நபி" - மர்யத்துக்கு பிறந்தவர். ஆனால் முகம்மது நபி தானே உண்மையான இறைத்தூதர், ஈஸா நபி கடவுள் கிடையாது என்று பிற்காலத்தில் அறிவித்தமையால் இயேசு பூஜிக்கத்தக்கவர் அல்லர். என் மொழிகள் - பெயர் ஆராய்ச்சியை புறந்தள்ளி, இப்போது நேரிடையாக விஷயத்துக்கு வருகிறேன்: இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு முன் இந்தப் பெயர்கள் 1.ஆபிரகாம், 2.சாரா, 3.இயேசு, 4. கிறிஸ்து 5. ஜோசப் ஆகியவை கிடையாது. குறிப்பாக பண்டைய யூதேயா பகுதியில் கிடையவே கிடையாது. பண்டைய யூதேயா என்பது தற்போதைய ஜெருசலேம், இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் போன்றவற்றை உள்ளடக்கிய வளமற்ற பகுதி. கேள்வி ) மேலே சொன்ன ஏசுவின் பித்ருக்கள் ஐந்து பேரின் பெயர்கள் எங்கிருந்து வந்தன? பிறந்தவுடன் ஏசுவுக்கு அந்தப் பெயர் வைக்கப்படவில்லை. பிற்காலத்தில் தான் அவ்வாறு அறியப்பட்டார் - விவேகானந்தர் (நரேந்திரன்), சின்மயானந்தர்(ராமகிருஷ்ண மேனன்) போல ஏற்றுக்கொண்ட ஞானப்பெயர். இயேசுவின் அம்மா பெயர் மரியம் என்றே தோராவில் உள்ளது. இயேசு பேசிய அராமிக் மொழியின் உண்மையான அர்த்தம் *இளம்பெண் மரியத்தின் கணவன் முதிர்ந்த யோசேப்பு*. அதுவே ஹீப்ரூ மொழிக்குப் போய் , கிரேக்க, லத்தீன் மொழிக்கு போய் ஆங்கிலத்தில் வந்தடைந்த போது *கன்னி மேரியின் கணவன் திரு.ஜோசப்* என்று மாறியது. மரியத்தின் இருப்பை புனிதப்படுத்துவதற்காக இளம்பெண் என்பது 'கன்னி' என்று வேண்டுமென்றே திரித்து மாற்றப்பட்டதாக வாதமும் உண்டு. அதாவது வயதான கணவனைப் பிடிக்காமல் வேறொருவன் தொடர்பில் பிறந்த குழந்தை என்ற ஏளன எண்ணம் வருவதைத் தவிர்க்க. இவ்வாதம் உண்மையும் கூட - ஏனெனில் யேசுவுக்கு குழந்தை ஏசுவாக அறியப்பட்ட ஏசு சிறுவனாக வளர்ந்த பின் கதைகள் இல்லை. முழுதும் வளர்ந்த ஆம்பிளையாகவே அவர் மீள் அறிமுகமாகிறார். அவர் வாழ்க்கையின் நடுவில் பல அவர் ஞானத்தேடலில் 2000 வருடங்களுக்கு முன் எல்லோரும் செய்ததுபோல் புண்யபூமியான பாரதத்துக்கு புனிதப்பயணம் செய்தார்.


Part - B இயேசு தானே அறிவித்துக்கொண்ட குடும்பப் பெயர்கள்
=======================================================
இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு முன் இந்தப் பெயர்கள் 1.ஆபிரகாம், 2.சாரா, 3.இயேசு, 4. கிறிஸ்து 5. ஜோசப் ஆகியவை கிடையாது. குறிப்பாக பண்டைய யூதேயா பகுதியில் கிடையவே கிடையாது. பண்டைய யூதேயா என்பது தற்போதைய ஜெருசலேம், இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் போன்றவற்றை உள்ளடக்கிய வளமற்ற பகுதி.  கேள்வி: மேலே சொன்ன ஐந்து பேரின் பெயர்கள் எங்கிருந்து வந்தன?  பிறந்தவுடன் ஏசுவுக்கு அந்தப் பெயர் வைக்கப்படவில்லை. பிற்காலத்தில் தான்  அவ்வாறு அறியப்பட்டார் - விவேகானந்தர் (நரேந்திரன்), சின்மயானந்தர்(ராமகிருஷ்ண மேனன்) போல ஏற்றுக்கொண்ட ஞானப்பெயர். இயேசுவின் அம்மா பெயர் மரியம் என்றே தோராவில் உள்ளது. இயேசு பேசிய அராமிக் மொழியின் உண்மையானபதிப்பில் சாசனப்படுத்தப்பட்டது:  *இளம்பெண் மரியத்தின் கணவன் முதிர்ந்த யோசேப்பு*.  அதுவே ஹீப்ரூ மொழிக்குப் போய் , கிரேக்க, லத்தீன் மொழிக்கு போய் ஆங்கிலத்தில்  வந்தடைந்த போது *கன்னி மேரியின் கணவன் எஜமானன் ஜோசப்* என்று மாறியது. மரியத்தின் இருப்பை புனிதப்படுத்துவதற்காக இளம்பெண் என்பது 'கன்னி' என்று வேண்டுமென்றே திரித்து  மாற்றப்பட்டதாக வாதமும் உண்டு. அதாவது வயதான கணவனைப் பிடிக்காமல் வேறொருவன் தொடர்பில்  பிறந்த குழந்தை என்ற ஏளன எண்ணம் வருவதைத் தவிர்க்க. இவ்வாதம் உண்மையும் கூட - ஏனெனில் கூடப் பிறந்தவர்கள் என யேசுவுக்கு யோவான், சிமியோன், யோஸே என மொத்தம் 7 சகோதர சகோதரிகள் -  மரியம் வயிற்றில் பிறந்தவர்கள் உள்ளனர். குழந்தை ஏசுவாக அறியப்பட்ட ஏசு சிறுவனாக வளர்ந்த பின் கதைகள் இல்லை. முழுதும் வளர்ந்த நடுவயதுள்ள  சட்டாம்பிளையாகவே அவர் மீள் அறிமுகமாகிறார். அவர் வாழ்க்கையின் நடுவில் பல பக்கங்களைக் காணோமே? காரணம்,   2000 வருடங்களுக்கு முன் பெரும்பாலான நாடுகளில் இருந்த பேரறிஞர்கள்  செய்ததுபோல்  அவரும்  ஞானத்தேடலில்  புண்யபூமியான பாரதத்துக்கு புனிதப்பயணம் செய்தார். இமாயலத்தில் தவம் செய்ததும், பூனைக்கண் சித்தர் என்று பேசப்பட்டார் என்றும் , கௌடிய மட குருமார்களைச் சந்தித்ததும் தெரிகிறது. எப்படி போதிதர்மன் திரும்பினாரோ அதுமாதிரி இயேசுவும் தாய்மண்ணுக்கு திரும்புகிறார்.  ஜெருசலேத்தில் உள்ளோர் இவரின் ஞானக் கருத்துக்களை, யோக , தியான முறைகளை புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. நேரெதிராக அங்குள்ள வழிபாட்டிடங்களில்(யூதக்கோவில்கள்) காட்டுமிராண்டித்தனம் செய்தனர். இவர்களுக்கு விவேகம், உயர் ஞானம், யோக மார்க்கம் புரிய வாய்ப்பில்லை என்பதால் எளிதான பரம்பொருளான கிருஷ்ண பக்தியை அவர்களுக்கு சொல்ல ஆரம்பித்தார். இங்குதான் முதன்முதலாக இஸாக் வழித்தோன்றல்களான 12 குடிகளைவிட்டு மட்டும் கடவுள் காப்பாற்றுவார் என்ற யூத ஐதீகத்தை விட்டுவிட்டு உலக அளவில் அனைவரையும் பேசுகிறார் யேசு. அவர் குலத்தின் முன்னோர்களான தாவீதின் குமாரன், சாலமனின் குமாரன் என்று தன்னை மட்டும் சொன்னவர் ஏன் எல்லோரையும் "நாமெல்லாம் ஆபிரகாமின் குழந்தைகள், கடவுளின் குழந்தைகள்" என்று சொன்னார்? கிருஷ்ண பக்தி மரபில் பிரம்மாவே உலகத்தைப் படைத்தார். ஆகவே ஆணித்தரமாக மலைப்பிரசங்கத்தில் யேசு அராமிக் மொழியில் அறிவிக்கிறார். உண்மையான கடவுள்களை யூதர்களுக்கு அறிவிக்கிறார். தான் பெற்ற பேரின்பத்தை, ஆன்மீக விடுதலையை, அவர் வெறும் யூதக்குடி அல்லர் உலகின் உயர்ந்த இந்து மதத்தை ஏற்றவர் என்பதை முழங்குகிறார் :  "உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் உருவாக்கியவர் பிரம்மாவே, ஆகவே அனைவரையும் நேசியுங்கள் நாம் அனைவரும் சரஸ்வதியின் தேவன் பிரம்மனால் உருவாக்கப்பட்டவர்கள்". (அதாவது LOVE THY NEIGHBOR) என்று பைபிள்) அதை பிற்காலத்தில் யேசுவின் சகோதரன் யோவான்(John) எழுதுகிறான். part - A  வில் விளக்கப்பட்ட  பன்மொழி மாற்று விதிகளின் படி ப்ரம்மன் மொழிபெயர்ப்பில் பிரம்கம் ஆகி அபிரகாம் ஆனது. சரஸ்வதி - சரஸ் ஆகி "ஸ்" ஆண் பெயர் எழுத்து ஆனதால் ஒதுக்கப்பட்டு   "சாரா" என்பது மட்டும் மிஞ்சியது. பிரம்மா - சரஸ்வதி கடைசியில் ஆங்கிலத்தில் Abraham - Sarah  ஆனது.  இயேசுவின் ஞானக் கடவுள், பரப்பிரம்மத்தின் பூலோக அவதாரம்  கிருஷ்ணனே. வசுதேவருக்கு பிறந்தவன் ஆயினும் வளர்ந்ததோ கோகுலத்தில் வசுதேவ்க்கு சம்பந்தமே இல்லாமல் - அவனின் சேஷ்டைகள் பெரும் குறும்புக்காரன், மாயக்காரன் "யசோதை மகன் கிருஷ்னன்" என்றே கோகுலம் முழுதும் ஒலித்தன. தன்னை "யசோதாவின் மகன் கிருஷ்ணன்"  - "யசோத கிருஷ்ணன்" என்றே யேசு சொன்னதுவே யேசு கிறிஸ்து ஆகிற்று.   பெற்றாலும் வசுதேவ் எங்கோ இருக்கிறார் - அந்த வசுதேவ் - யோசேப் (ஜோஸஃப் Joseph) ஆகிற்று.  இயேசு தன்னை "கிருஷ்ணன் பக்தன்" என்று கூறிக்கொள்கிறார். அது பல மொழிபெயர்ப்பில் "கிருஷ்ணனின் சிஷ்யன்" என்றாகி யூதமரபின் படி "கிருஷ்ணனின் மகன்" என்றே பாராட்டப்படுகிறது. கிருஷ்ண ஞானமரபுப்படி ஒவ்வொருவரும் கிருஷ்ணனின் மாயையே ஆகையால் இயேசு தன்னையே கிருஷ்ணன் படைத்ததாகவும், தானே ஆண்டவனாகிய கிருஷ்ணன் வெளிப்பாடே என்கிறார். இதுவே "I am the God and I am the Son of the God" என்று இரண்டையுமே இயேசு சொல்வதாக வருகிறது.  ஆகவே 1.ஆபிரகாம் - பிரம்மன் , 2.சாரா - சரஸ்வதி , 3.இயேசு - யசோதா (வின் மகன்), 4. கிறிஸ்து (கிருஷ்ணன் ) 5. ஜோசப் (கிருஷ்ணின் தந்தை வசுதேவ் ) இப்பொது தெள்ளத்தெளிவாக பைபிள் ஏன் "நாம் அனைவரும் ஆபிரகாம்,சாராவின் வழித்தோன்றல்கள் /   குழந்தைகள்"(பிரம்மனால் படைக்கப்பட்டவர்கள்)என்றும் உண்மையில் தேவமகனான யேசுவின் தந்தை எப்படி யோசேப்பு ஆகும் என்பதுவும் தெரியும். 

Sunday, April 17, 2022

The lit Files

அய்யா வழி, சிவஞான போதம் என்றெல்லாம் தினமும் எழுதி 400 லைக் வாங்கும் பத்துப் பதினைந்து அறிவுஜீவிகள் இன்று நாடகக் காதலை, உடுமலைப்பேட்டை சகோதரி கொலையைக் கண்டிக்கிறார்கள். இந்த நாடகக் காதலைப்பற்றி 13 வருஷம் முன்பு எழுதிய போது என்னை அசிங்கப்படுத்தி, மன்னிப்புக்கேட்க வைத்து மனநோயாளி என்று விமரிசித்து கூகிள் குழுமத்தை விட்டு நீக்கியவர்கள்தான் இவர்கள்.

Saturday, August 8, 2020

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன்

திரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது ...இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும். ஆனால், அண்ணாதுரை விஷயத்தில் அது ஒரு சமூக அநாகரிகமாக மாறி, எனது உணர்ச்சிகளை வெகுவாகப் பாதித்திருந்தது. ஒரு நாட்டின் பெருமைக்குரிய ஜனாதிபதி மறைந்தபோது கூட இல்லாத அளவுக்கு மிக அதிகமான அவலக் குரலை ரேடியோவும், தமிழக அரசாங்கமும் அருவருக்கத்தக்க முறையில் இங்கு கிளப்பின. அந்தக் குரலோடு தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களின் குரலும் (இன்று அவர்களில் பலர் காங்கிரஸில் இல்லை.) சேர்ந்து ஒலித்தது எனக்குச் சகிக்க முடியாததாயிற்று. அவர்கள் எல்லாருமே காங்கிரசில் இருந்த காலத்தில் அண்ணாதுரையை மிகக் கடுமையாக வசைபாடியவர்களும் ஆவர். 'அண்ணாதுரை மாயை ' என்பதாக ஒன்று, லாட்டரி சீட்டு மாயை மாதிரி தமிழகப் பாமரர்களின் மீது கவிந்தது. அதற்குக் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரும் ஆட்பட்டார்கள். எனது நண்பர் கண்ணதாசன் காங்கிரஸ் இளைஞர்களுக்கொரு தளபதியாகப் பாவிக்கப்பட்டிருந்தும், அன்று அண்ணாதுரை மறைந்ததும் பகிரங்கமாக அழ ஆரம்பித்து விட்டார். காங்கிரஸ்காரர்களுக்குக் கொள்கை விளக்கம் தர வந்த 'கடிதம் ' என்னும் அவரது பத்திரிகை தொடர்ந்து அண்ணாதுரைக்கு நாமாவளி செய்ய ஆரம்பித்தது. இது குறித்து எனது விமர்சனங்களை அவரிடமே நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் அண்ணாதுரைக்கும் தனக்கும் உள்ள தனிப்பட்ட அபிமானம் பற்றியே அதிகம் அழுத்தம் தந்தார். எனவே அதுபற்றி அவரிடம் பேசுவதில் பயனில்லை என்று விட்டுவிட்டேன். ஆனால் அவரோ, என்னிடம் அண்ணாதுரையின் 'பிரதாபங்கள் ' குறித்துப் பேசுவது மட்டும் அல்லாமல் என்னையும் அது குறித்துப் பேசுமாறு அழைத்தார். சத்தியமூர்த்தி பவனில் கூட்டம். கவிஞர் கண்ணதாசன்தான் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர். நான் முன்கூட்டியே அவரிடம் சொன்னேன். 'நீங்கள் அழைக்கிற எந்தக் கூட்டத்துக்கும் வந்து பேசுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. அதே சமயத்தில் உங்கள் உணர்ச்சிகளுக்குப் புறம்பான சில உண்மைகளை நான் சொல்ல நேரும். அண்ணாதுரை மறைவு குறித்துப் பேசாமல் இன்றையச் சூழலில் இந்த மக்கள் மத்தியில் வேறு அரசியல் விவகாரம் பேசுவது அபத்தமான காரியமாக இருக்கும். உங்களுக்குச் சம்மதம்தானா ? ' 'உங்களுக்குப் பிறகுதான் நான் பேசப்போகிறேன்; நீங்கள் சுதந்திரமாகப் பேசுங்கள் ' என்று மிகுந்த நம்பிக்கையோடு சொன்னார் கவிஞர். நானும் ஒப்புக்கொண்டேன். எனது நண்பர்கள் பலர் அது குறித்து ஓரளவு அதிருப்தி கொண்டார்கள். அந்தச் சூழ்நிலையில் அண்ணாதுரையை விமர்சித்துப் பேசுவதை எந்தக் கட்சியைச் சேர்ந்த மக்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர்கள் தவறாகக் கணித்திருந்தார்கள். மேலும் நான் விமர்சித்த பிறகு கண்ணதாசன் அவர்கள் அண்ணாதுரையை ஆதரித்தும் அவர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தும் பேசப் போகிறார் என்பதனாலும் அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்வது சில நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு அப்படிப்பட்ட சலனங்கள் ஏதும் ஏற்படவில்லை. அண்ணாதுரையைப் பற்றி இவர்கள் ஏற்படுத்துகிற மாயைகள் எவ்வளவு கனத்தவையானாலும் கரையத் தகுந்ததே என்பதை நான் தெளிவாக உணர்ந்திருந்தேன். திரு.அண்ணாதுரை மறைந்தபோது அரசியல் மரியாதைக்கோ, தனது சுயமரியாதைக்கோ சிறிதும் பங்கமில்லாமல் மிக நாகரிகமாகத் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் திரு.காமராஜர் மட்டுமே ஆவார். அதற்கு அடுத்தபடி எந்தப் பிரிவில் என்னைச் சேர்த்துக் கொண்டாலும் அந்தப் பிரிவில் நான் மட்டுமே அந்த மாயையை எதிர்த்து உடனடியாகவும் பகிரங்கமாகவும் முதற்குரல் கொடுத்தவன். இது குறித்து எனக்கு இப்பொழுதும் மகிழ்ச்சியே ஏற்படுகிறது. அந்தக் கூட்டத்தில் எனக்கு முன்னால் பேசியவர்களெல்லாம் அண்ணாதுரையின் மேலான கலியாண குணங்களை எடுத்துக் காங்கிரஸ் தோழர்களுக்கு விளக்கினர். தங்களுக்கும் அவர்களுக்கும் இருந்த தனிப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து நெஞ்சுருகினர். தேசியத் தினசரிகளெல்லாம் அண்ணாதுரை இறந்த அன்று விடுமுறை அனுஷ்டித்தன. மறுதினத்திலிருந்து அண்ணாதுரையின் வாழ்நாள் பெருமைகளையும், அவரது மரணத்தின்போது கூடிய பிரம்மாண்டத்தனத்தையும், அதன் மூலம் வெளிப்படுகிற மக்களின் 'அண்ணா அன்பை 'யும் வியந்து போற்றி விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தன. எனக்கு முன்னால் பேசியவர்கள் உருவாக்கியுள்ள இந்தச் சூழ்நிலையில் இவ்வளவு பெரிய கூட்டத்தினிடையே இதே சுருதிக்கு மாறான, இதை முற்றாகக் கலைத்துக் குலைக்கிற ஓர் இடியோசை எழுப்புவதன் விளைவைக் குறித்து நானும் கூட என்னுள் ஒரு கணம் தயங்கினேன். அந்தத் தயக்கம் ஒரு பாவனையே. அந்தக் கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரின் மனத்துடிப்பையும் நாடி பிடித்துப் பார்க்கிற மாதிரி ஒவ்வொரு முகத்தையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது பார்வையை அந்த முகங்களும் சந்தித்த பொழுது அவர்களும் என்னைப் போலவே எனது மனோ உணர்ச்சிகளைப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றூ நான் உணர்ந்தேன். நான் கடைசியில் பேசினேன்: (எனக்குப் பின்னால் பேசவிருந்த கவிஞர் அவர்கள், நன்றியுரைதான் கூற முடிந்தது.) 'இங்கே வந்திருக்கிற நீங்கள் அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய கும்பலை ஒத்தவர்கள் அல்லர். நீங்கள் அங்கேயும் போயிருந்திருக்கலாம். எனினும், அந்தக் கும்பலில் நீங்கள் கரைந்து விடவில்லை. எனவேதான், நீங்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும். அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய அந்தக் கும்பல் எவ்வளவு பெரிது எனினும் இந்தக் கூட்டம் அதனினும் வலிது. கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டு கொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதட்டமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது. இதற்கு ஒரு நோக்கமும், இலக்கும், குறியும், நெறியும், நிதானமும் உண்டு... ஆனால் கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கிற அறியாமையின், பைத்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம்; அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு. கும்பல் ஒரு பலமல்ல; அது பலவீனங்களின் தொகுப்பு. கோழை அங்கேதான் கொலை வெறியனாகிறான்; பேடி அங்கேதான் காமப்பிசாசாகிறான்... காலஞ்சென்ற அண்ணாதுரையைப் பற்றி எனக்கு முன்னால் பல நண்பர்கள் பேசினார்கள். அவர்களது நல்உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற நோக்கம் எனக்கில்லை. ஆனாலும் அண்ணாதுரையைப் பற்றிய எனது சரியான உணர்ச்சிகளை இங்கே நான் சொல்ல வந்திருக்கிறேன். இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது. அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும்மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை. அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சகப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன். பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை... அரசியல்வாதிகள் - அதாவது ஓட்டு வாங்கி, பதவியைப் பிடித்து அதன் மூலம் தங்கள் கொள்கைப்படி தேசத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பல கொடிகளின் கீழ் லட்சியத்துக்காகப் பணியாற்றுகிறவர்கள் - அண்ணாதுரையின் தயவை நாடினார்கள். அதற்காக அண்ணாதுரையும், தி.மு.கழகமும் அவர்களோடு பேரம் நடத்தியதுண்டு. 'எல்லாவிதமான பலவீனங்களையும் தனக்கும், தனது கழகத்துக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சமுதாய நாணயத்திலும், அரசியல் நாணயத்திலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன அண்ணாதுரையை தி.மு. கழகம் தனது தலைவராக வரித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை... கலைத்துறை, இலக்கியத்துறை, மொழித்துறை, பொருளாதாரத்துறை, எல்லாமும் சங்கமிக்கிற சமுதாயத்துறை ஆகிய எல்லாவற்றிலும் அண்ணாதுரை எடுத்துக் கொண்ட நிலைகள் தரம் குறைந்து தாழ்ந்து, மூடர்களையும் முரடர்களையும் மட்டுமே சார்ந்து இருந்ததை நான் எப்படி மறப்பேன் ? அண்ணாதுரை, தான் கைக்கொண்ட எல்லாக் கொள்கைகளையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கைகழுவிக் கொண்டுதானிருந்தார். அதற்காகவும் அவரைப் பாராட்ட முடியவில்லை. ஏனெனில் ஒரு கருத்து தவறானதென்றல் அதைக் கைவிட்டு விடத்தான் வேண்டும்; இது பாமரர்க்கும் அறிஞர்க்கும் பொது. ஆனால் பாமரன் மறுபடியும் ஒரு புதிய தவறிலே சிக்குவான். அண்ணாதுரை தனது வாழ்க்கை முழுவதிலும் புதிய புதிய தவறுகளையே செய்து கொண்டிருந்தார். பொய்யையும் சாகசத்தையும் தமது அரசியலுக்கு மூலதனமாகக் கொண்டிருந்த அண்ணாதுரை, தன்னைப் பற்றிய உண்மைகளை ஒரு உயிலாகக் கூட எழுதி வைக்கவில்லை. பண்டித ஜவஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கு முன்னாலேயே தமது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தார். தம்மை நாத்திகர்கள் என்று அழைத்து கொண்ட கார்ல் மார்க்சும் எங்கெல்சும் தங்களது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தனர். மகாத்மா காந்தியடிகள் எழுதியதெல்லாம் அவரது வாழ்க்கையின் சாசனமே. இவர்களின் மீதெல்லாம் மரியாதை வைத்திருக்கிற நான், அண்ணாதுரைக்கும் அதே விதமான மரியாதையை எப்படித் தர முடியும் ? எந்த ஒரு மரணமும் எப்படி எனக்கு வருத்தம் தருமோ, அதே போல அண்ணாதுரையின் மரணத்துக்கு மனிதாபிமானமும் மரியாதையும் மிகுந்த முறையில் எனக்கும் வருத்தம் உண்டு. எனது எதிரிகூட நீண்ட நாள் வாழ்ந்து என்னிடம் தோல்வியை அடைய வேண்டுமென்றே நான் விரும்புவேன். ஒரு மரணத்தின் மூலம் அவன் தப்பிச் செல்வது எனக்கு சம்மதமில்லை. எதிரிகளை வெல்ல வேண்டும். அழிப்பது கூடாது. கொடிய நோய்களினாலும், கோரமான விபத்துக்களினாலும் அவர்கள் அழிந்து படுவது கடவுள் சாட்சியாக எனக்குச் சம்மதமில்லை; அந்த அழிவில் லாபம் காண்பதும், மகிழ்ச்சியுறுவதும் காட்டுமிராண்டித்தனமானது.... என்னைப் போலவே இந்த உண்மைகளை உணர்ந்திருந்தும், பெருந்தன்மை கருதியோ அல்லது பேசமுடியாமலோ நீங்கள் மெளனமாயிருக்கிறீர்கள். அந்த மரணத்தையும் இந்த மெளனத்தையும் சமூகத்தின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். நான் ஆரம்பித்த பத்திரிகை கூட அண்ணாதுரைக்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கென்று ஒரு பத்திரிகை இல்லாத கொடுமையை நான் இப்போது அனுபவிக்கிறேன் ' - என்றெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன். (நன்றி: ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் - ஜெயகாந்தன் - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 625 001) .

Tuesday, June 23, 2020

வாஞ்சிநாதன்

Image may contain: 7 people17 ஜூன் 1911 ஆங்கிலேய அரசு அலறி துடித்த நாள்.. உலகம் முழுவது பரபரப்பாக இந்த கொலையை பற்றி பேசிய நாள்.
ஆம் நண்பர்களே இதே நாளில் வாஞ்சிநாதன் என்னும் 25து வயதேயான இளைஞர் திருநெல்வேலி கலெக்டர்ராக இருந்த அஷ் துறையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்றார். சென்ற நூற்றாண்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட அரசியல் கொலைவழக்குகளில் இந்த வழக்கும் ஒன்று. இந்த கொலை தான் இந்திய சுதந்திரத்திற்கே பிள்ளையார் சுழி போட்ட கொலை.
இந்த வழக்கின் அணைத்து ஆவணங்கள், விசாரணை முழுவிபரங்கள் வழக்கின் தீர்ப்பு அனைத்தும் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது, இணையத்தில் தேடினாலும் கிடைக்கும். அந்த தீர்ப்பிலுள்ளவற்றை சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். தயவு செய்து ஒரு இரண்டு நிமிடம் படித்து, முடிந்தால் நம் இளைஞர்களுக்கும் பகிருங்கள்.
வாஞ்சிநாதன் கொலை வழக்கு அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் :
1. நீலகண்ட பிரமச்சாரி (முக்கிய குற்றவாளி)
2. சங்கரகிரிஷ்ணா ஐயர் (அஷ் கொலையின்போது உடனிருந்தவர்)
3. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை (காய்கறி வியாபாரி)
4. முத்துக்குமாரசாமி பிள்ளை (பானை வியாபாரம்)
5. சுப்பையா பிள்ளை (குமாஸ்தா)
6. ஜெகநாத ஐயங்கார் (சமையல்காரர்)
7. ஹரிஹர ஐயர் (வியாபாரி)
8.பாபு பிள்ளை (வியாபாரி)
9. தேசிகாச்சாரி (வியாபாரி)
10. வேம்பு ஐயர்(சமையல்காரர்)
11. சாவடி அருணாச்சலம் பிள்ளை (விவசாயி)
12. அழகப்பா பிள்ளை (விவசாயி)
13. வந்தே மாதரம் சுப்ரமணிய ஐயர் (ஆசிரியர்)
14. பிச்சுமணி ஐயர் (சமையல்காரர்)
ஆறுமுக பிள்ளை மற்றும் சோமசுந்தர பிள்ளை அரசாங்க தரப்பு சாட்சிகளாக மாறினார்.
போலீஸ் தங்களை தேடுகிறார்கள் என்று தெரிந்து தர்மராஜா ஐயர் விஷம் குடித்தும் மற்றும் வெங்கடேச ஐயர் கழுத்தை அறுத்தும் தற்கொலை செய்துகொண்டார்கள்.
திருச்சி வி.வி, எஸ். ஐயர், திருநெல்வேலி சுப்பிரமணிய பாரதி, ஸ்ரீனிவாச ஆச்சாரி, நாகசாமி ஐயர் மற்றும் ஓட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை இவர்கள் மீது பிடி வாரண்ட் இருந்தது இதில் முதல் நால்வர் பாண்டிச்சேரியில் இருந்ததால் பிடிக்கமுடியவில்லை, ஓட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை தான் அஷ் துறை மீது துப்பாக்கி சூடு நடக்கும் போது வாஞ்சிநாதனுடன் இருந்தவர் ஆனால் இவரை கடேசிவரை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை..
பொதுவாக குற்றம் நடந்த இடத்தின் அதிகாரவரம்பிற்கு உட்பட்ட நீதிமன்றமான திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில் தான் நடந்திருக்க வேண்டும் அனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை தாமே முன்வந்து எடுத்து விசாரித்தது.
சென்னை உய்ரநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சார் அர்னால்டு வைட் , மற்றும் நீதிபதி அய்லிங் ஆகிய வெள்ளைக்கார நீதிபதிகளும் நீதிபதி சங்கரன் நாயர் என்ற இந்திய நீதிபதியும் விசாரணை நடத்தினர்.
ஆந்த காலகட்டத்தில் பொதுவாக கொலைவழக்குகளின் ஜூரி (நடுவர் குழு) நியமிக்கப்படும், இந்த ஜூரியில் பொதுமக்களில் இருந்து தேர்ந்தெடுத்து வழக்கின் தன்மைக்கேற்ப 9 நபர் முதல் 12 நபர் குழுவை நியமிப்பார், இந்த குழுதான் குற்றம்சாட்டப்பட்டவர்களை தீர விசாரித்து குற்றவாளியா அல்லது நிரபராதியா என்னும் முடிவை நீதிபதிகளுக்கு தெரிவிக்கும், இந்த ஜூரியின் முடிவை வைத்தே நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள். அனால் காலெக்ட்டர் அஷ் கொலைவழக்கில் ஜூரி அமைக்கப்படவில்லை, நீதிபதிகளே நேரடியாக விசாரித்தார்கள்.
அரசு தரப்பு வழக்கறிஞர்களாக, நேப்பியர், ரிட்மென் மற்றும் சுந்தர சாஸ்த்ரி ஆஜரானார்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிறையபேர் இருந்ததால் ஏராளமான அக்காலத்து மிக சிறந்த வழக்கறிஞர்கள் எல்லாம் ஆஜரானார்கள் , அவர்களுள் பாரிஸ்டர் ஜே. சி. ஆடம்.. மிக திறமையாக குற்றவாளிகள் தரப்பில் வாதாடிய வெள்ளைக்கார வழக்கறிஞர், அவரை தவிர வழக்கறிஞர் தந்தூரி பிரகாசம் (பின்னாளில் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தவர்), டி.எம். கிருஷ்ணசாமி ஐயர் (பிற்காலத்தில் திருவாங்கோர் உய்ரநீதிமண்டத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்), எம், ஏ, கோவிந்தராகவ் ஐயர், எஸ்.டி. ஸ்ரீநிவாச கோபாலச்சரி, விரையுறு நம்பியார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கலெக்டர் அஷ் பொதுவாகவே இந்தியர்களை வெறுக்கும் குணமுடையவர், இந்தியர்களை மிகவும் கொடூரமாகவும் கீழ்த்தனமாகவும் நடத்திய பல நிகழ்வுகள் முன்வைக்கப்பட்டடு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது., சுதேசி கப்பலை முடக்கி வஉசி மற்றும் சுப்ரமணிய சிவா அவர்களுக்கு தேசத்ரோகவழக்கில் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை வாங்கிக்கொடுக்க கலெக்டர் அஷ் மூர்க்கத்தனமாக செயல்பட்டார் என்றும், கோரல் மில் போராட்டத்தின் போது அந்த போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களை தரையில் அமரச்செய்து அவமானப்படுத்தி மிரட்டியதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டு ஏழு தொழிலாளர்கள் பலியாக காரணமாக இருந்தார், இதில் மூவர் தலித் தோழர்கள். கலெக்டர் அஷ் மீது தொடர்ந்து இந்தியர்களை தனது கடுமையான அடக்குமுறையால் அடக்கியாள நினைத்தார் அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் வெறுப்பாக மாறி அவருக்கு எதிராக திருநெல்வேலி ஜில்லமுழுவதும் போராட்டம் நடந்தது அந்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்.. கட்டுக்கடங்காமல் போன அவரின் அத்துமீறல்கள் காரணமாகவே அவற்றின்மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை கொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டது என்ற முடிவிற்கு நீதிமன்றம் வந்தது.
வாதிதரப்பும், பிரதிவாதி தரப்பிற்குமிடேயே நடந்த வாதம் அனல்பறந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆங்கிலேய நீதிபதிகள் இருவர் கூட்டாக தமது தீர்ப்பை வெளியிட்டனர், இந்திய நீதிபதியான சங்கரன் நாயர் மிக தைரியமாக இந்திய சுதந்திர போராட்டத்தை ஆழமாக தமது தீர்ப்பில் அலசியிருந்தார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக சதிசெய்தார்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை என்றும் நீலகண்ட பிரமச்சாரியின் குற்றம் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பெழுதிய அவர் தனது தீர்ப்பின் முடிவில் `என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்' என்னும் மகாகவி பாரதியின் வரிகளை மேற்கோள்காட்டி மிகச்சிறப்பான தீர்ப்பை வெளியிட்டார் .இந்த தீர்ப்பு அக்காலத்தில் சிறந்த தீர்ப்பாக கொண்டாடப்பட்டது அந்த தீர்ப்பை அப்படியே Role of students in freedom movement with a special referencet to Madras Presidency என்னும் பெயரில் புத்தகமாக வெளியிட்டார்கள்.
நீதிபதிகளின் பெரும்பாலான தீர்ப்பினடிப்படையில் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், சங்கர கிருஷ்ணனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மற்றவர்களுக்கு எல்லாம் குறைந்த தண்டனையே வழங்கப்பட்டது.
இந்த கொலை நடந்து 109 ஆண்டுகள் உருண்டடோடிவிட்டது, இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட அனைவரும் மிகவும் சாதாரணமானவர்கள், 20 முதல் 30 வயது இளைஞர்கள், உதவி, ஆறுதல், அரவணைப்பு இல்லாமல் இவர்களின் மனைவி, மக்கள் எல்லாம் கஷ்டப்பட்டு கஞ்சிக்கே வழியில்லாமல் மாய்ந்து போனார்கள், வாஞ்சிநாதனின் இளம் விதவை பொன்னம்மாள் பட்ட கஷ்டத்தையெல்லாம் விவரிக்க வார்த்தைகள் இல்லை. இதையெல்லாம் ஒருகணம் நினைத்து பாருங்கள். காலவோட்டத்தில் இந்த தியாகிகளின் தியாகமும், சிந்திய ரத்தமும், கண்ணீரும் மக்களின் நினைவிலிருந்து காற்றோடு காற்றாக கரைந்துபோய்விட்டது. அஷ் துறையை கொலை செய்ய தூண்டியது இவர்களின் நாட்டுப்பற்றே தவிர வேறு எந்த சொந்த விருப்பும் வெறுப்பும் கிடையாது.. அனால் காலவோட்டத்தில் இப்பொழுது தியாகிகளை போற்றுவதற்கு பதிலாக நீதிமன்றமே அடக்கு முறையை கையாண்டார் இந்தியர்களை வெறுத்தார் என்று ஓபுண்கொண்ட அஷ் துறைக்கு மலர்வளையம் வைக்க ஒரு கும்பல் அறியாமையில் கிளம்பிவிட்டது.. இதை நினைக்கும்போது நெஞ்சம் குமுறுகிறது.
தியாகி வீர வாஞ்சிநாதன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.
வதந்தி ஒன்று - குற்றாலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை குளிக்க அனுமதித்தார் கலெக்டர் ஆஷே ??
பதில் - முதலில் குற்றாலம் திருநெல்வேலி ஜில்லாவிற்குள் வராது, குற்றாலம் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு கீழ் வரும், அஷ் துறையே குற்றாலத்தில் குளிக்கபோகணும்னா சமஸ்தானத்துக்கிட்ட அனுமதி வாங்கணும் அப்படி இருக்க ஆஷ் எப்படி குற்றாலத்துல எல்லா சாதி மக்களும் குளிக்கலாம் என்று எப்படி ஆணை பிறப்பிக்க முடியும் ?? சிந்தியுங்கள்
வதந்தி இரண்டு - ஒரு தலித் பெண் பிரசவ வழியில் துடித்தாராம் ஆஷ் துறையும் அவனது மனைவியும் தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அக்ராஹாரத்து வழியில் எடுத்து சென்றார்களாம் மருத்துவமனைக்கு ?
பதில் - 1911ம் வருடம் இந்தியாவில் வீட்டிலிருந்தே பிரசவம் பார்க்கும் பழக்கம் கடைபிடிக்க பட்டது... அந்த காலகட்டத்துல சாமானியர்களுக்கு மருத்துவமனை எல்லாம் ஆங்கிலேயர்கள் கட்டவில்லை. நம்ம ஊரு நாட்டு வைத்தியச்சி தான் பிரசவம் பார்ப்பார்கள். மேலும் ஆங்கிலேய கலெக்டர்கள் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லவோ, பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவோ முடியாது என்கிறது ICS Officers guidelines. 1930ல் தான் இந்தியாவில் காரே அறிமுகமானது.
ஆஷே ரோம்ப நல்லவர் வல்லவர் என்று உளறி போஸ்டர் போஸ்டர் அடிச்சு மலர்வளையத்தை தூக்கிட்டு சுத்துற இலைகர்களே கொஞ்சம் சிந்தியுங்க.. அரசியல் லாபத்திற்காக, பொது விருப்பு வெறுப்புகளுக்காக தயவு செய்து சுதந்திர போராட்ட தியாகிகளை கொச்சைப்படுத்தாதீர்கள், உங்கள் பாதம் தொட்டுகேட்டுக்கொள்கிறேன். நாம் இன்று சுதந்திர நாட்டில் எழுத்து, பேச்சு, கருது சுதந்திரம் என்னும் பெயரில் யாரை வேண்டுமானாலும் கேள்விகேட்கிறோமே, சுதந்திர காற்றை சுவாசிக்கிறோமே, இதற்கான விலையை நமது முன்னோர்கள் என்றோ கொடுத்துவிட்டார்கள். Our ancestors had already paid for our freedom.
புரட்சியாளர் பகத் சிங்கிற்கு முன்னோடி நம் வீர வாஞ்சிநாதன் அவரின் தியாகத்தை போற்றுவோம்..
ஜெய் ஹிந்த்

Saturday, May 16, 2020

CORONA VIRUS & Islamophobhia

Hindu tax payers pay more than 95% of the expenses in this College & Hospital. But 90% of students and doctors  are Christians !!

While a poor Hindu man was asked to pay Rs 20 Lacs to collect his wife's dead body, Muslims who took free treatment with gourmet meals and gifts - had trained children to swear death to Modi*0. உண்மையில் சட்டப்படி குடிமகனாக பாகிஸ்தானில் இருக்கும் ஹிந்துவை*1 விட பர்மாவில் ஹிந்துக்களை கொன்றுவிட்டு*2 பின்பு  கள்ளத்தனமாக இந்தியாவில் குடியுரிமை இல்லாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இஸ்லாமியர்கள் சௌகர்யமாகவே இருக்கிறார்கள்*3 .பல பெண்களை கவர்ந்து கலவி புரிந்து பெண்களுக்குக் களிப்பூட்டும் சேவையும் செய்கிறார்கள். இஸ்லாமியப் பெண்கள் வீரத்தோடு முழு செங்கல்லை மூன்றாம் மாடியிலிருந்து வீரர்கள் மீது வீசுகிறார்கள்*4, ஆண்கள் ரேப் செய்கிறார்கள்*5; கிறிஸ்தவர்கள் சாமியார்களை அடித்துக்கொன்றுவிட்டு*6 பஞ்சாயத்து தலைவனை மிரட்டுகிறார்கள்*7. தைரியமாக கிறிஸ்தவர் பெனெடிக்ட் என் தெய்வம் போன்ற அன்னையை xxx சொல்லுகிறார்*8 ; போலீஸாரின் காவலை சர்வசாதாரணாமாக தாண்டி ஒரு இன்ஸ்பெக்ட்டரை தலைகுனிய வைக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.*9.  2 மாதங்களுக்கு பின்னும் இந்தியாவில் ஒளிந்துகொண்டே இருக்கிறார்கள்*10.

Tuesday, August 13, 2019


Image may contain: 1 personண்ணாதுரை (எ) அண்ணாதுரை பற்றி ............................
- - - - - - - - - - - - - - - -

அண்ணாதுரை என்பதில் 'துரை' என்பது தெலுங்கு வார்த்தை.

பெயருக்கேற்றாற்போல இவர் தமிழரான நடராசன் என்பவருக்கும் தெலுங்கரான பங்காரு அம்மாளுக்கும் பிறந்தவர்.

நடராசன் நெசவுத் தொழில் செய்யும் முதலியார் (கைகோளார்).
அண்ணாதுரையின் பிறப்புக்கு மட்டும் காரணமானவர்.

பங்காரு அம்மாள் ஒரு தேவதாசி.
இவர் பிற்காலத்தில் சென்னையில் வாழ்ந்த (தெலுங்கர்) நையாண்டி ஐயர் என்பவரின் வைப்பாட்டியாக ஆகிவிட்டார்.
அண்ணாதுரைக்கு தகப்பன் போல இருந்தவர் இவர்தான்.

இவருக்கு கிடைத்த முதல்வேலை கூட்டிக்கொடுப்பது.
அதுவும் தன் வீட்டுப் பெண்ணையே.

தனது அக்கா மகளை காஞ்சிபுரத்தின் பெருஞ்செல்வந்தரான பொன்னப்பா என்பவரின் இடத்திற்கு இரவில் அழைத்துச்சென்று கூட்டிக்கொடுத்துவிட்டு வாசலில் காவல் இருப்பது,
விடியும் முன் அக்கா மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துப்போவது.
இதற்கு பொன்னப்பாவிடமிருந்து ஐந்தோ பத்தோ வாங்கிக்கொள்வார்.

இவர் மாமாவேலை பார்த்ததற்கு சான்று 30-9-1958 நாளில் பாரதிதாசன் குயில் இதழில் (குரல் -1 இசை -18)
'அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?'
என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை.

அதில் அண்ணாதுரையின் துப்பு என்ன என்பதையும்,
பொற்கிழி அளிக்கவிருந்த விழாக்குழுவில் முக்கிய உறுப்பினராய் இருந்த டி.என்.ராமன் என்பவரை அண்ணாதுரை கைக்குள் போட்டுக்கொண்டு
(இதை 'மேளம் மேளத்தை
ஆதரிக்க என்ன தடை?' என்று குறிப்பிடுகிறார், அதாவது இருவரும் தெலுங்கு சின்னமேளம் சாதியைச் சேர்ந்தவர்கள்)
தன் கையால் பணமுடிப்பை அளிப்பது போல நிகழ்ச்சி நிரலை மாற்றி அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டதையும்,
அந்த பணத்தில் அண்ணாதுரை 5000 ரூபாயைத் திருடிக்கொண்டதையும்,
பிறகு ஏதோ தானே பணம் கொடுத்ததுபோல விளம்பரம் செய்துகொண்டதையும் குறிப்பிடுகிறார்.

பிறிதொரு காலத்தில் அண்ணாதுரை வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்பதையும் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

தள்ளாத வயதில் ஈ.வே.ரா தன்னைவிட 40வயது குறைந்த வளர்ப்பு மகளையே திருமணம் செய்ததை எதிர்த்து அண்ணாதுரை வெளியேறி தி.மு.க வைத் தொடங்கி ஈ.வே.ராவை கடுமையாக கேலி கிண்டல் செய்து எழுதுகிறார்.

இதற்கு பதிலடியாக ஈவேரா காமராசரை ஆதரிக்கிறார்.
தெலுங்கரான அண்ணாதுரையை எதிர்க்க காமராசரை 'பச்சைத் தமிழர்' என்று குறிப்பிடுகிறார்.

பசும்பொன் முத்துராமலிங்கனார் கூட
"பச்சைத் தமிழர் ஆட்சி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தப் ‘பச்சைத் தமிழருடைய' ஆட்சியில் இந்த ராஜ்யம் ‘தமிழ் ராஜ்யம்’ என்று அறிவிக்கப்படாவிட்டால் பயன் என்ன?"
என்று காமராசரை விமர்சித்து எழுதியுள்ளார்.

மதுரையில் ஒரு மேடையில் முத்துராமலிங்கத்தேவர் பேச வந்தபோது அம்மேடையில் அண்ணாதுரை உட்கார்ந்திருந்தார்.
உடனே அவர்
"தேவடியாள் மகன் ஏறிய சபையில் நான் கால்வைக்க மாட்டேன்" என்று கூறினார்.

அண்ணாதுரை ஒரு தேவதாசி மரபினர் என்பதும்
அவர் விபச்சாரம் செய்வதையும் அனைவரும் அறிந்திருந்தனர் என்பது இதிலிருந்து புரிகிறது.

காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை,
வாக்காளர் பட்டியலில் தன்னை
“அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்தார்.
“சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது”
என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.

சட்டசபையில்
"உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்புண்டா?"
என்று கேட்டதற்கு
"நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல
அவள் படிதாண்டாப் பத்தினியும் அல்ல" என்று பதிலளித்தார்.

பலரும் அண்ணாதுரை இந்தி எதிர்ப்புக்காகப் போராடினார் என்கின்றனர்.
இந்தி எதிர்ப்பு போராட்டமானது சோமசுந்தர பாரதியார் தலைமையில் தொடங்கியது.
முதன்முதலாகக் கைதானவர் ஈழத்தடிகள் என்ற சாமியார் (ஈழத்தமிழர்).
ஈ.வே.ரா, அண்ணா ஆகியோர் பிறகுதான் அதில் பங்கெடுத்தனர்.
இந்தி எதிர்ப்பு போராக வெடித்தது.
150 பேர் உயிரிழந்திருந்த வேளை
அண்ணாதுரை
“இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது.
(1965) ஜனவரி 26-ம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது”
என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

அப்போது விராலிமலை சண்முகம் என்ற இளைஞர் அண்ணாதுரைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தற்கொலை செய்தார்.
அதன்பிறகு போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

ஆக இந்தி எதிர்ப்பு தமிழ் இயக்கங்களால் தொடங்கப்பட்டு தமிழக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமே தவிர திராவிடவாதிகளின் பங்கு அதில் மிக மிக குறைந்த அளவே.

ம.பொ.சி 'குமரி முதல் திருப்பதி' வரை உள்ள நிலப்பரப்பைக் கொண்ட புதிய தமிழகம் அமைப்பதை வலியுறுத்தி 1947 சனவரி 14 பொங்கல் திருநாளை 'தமிழர் திருநாள் விழா'வாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார்.
பல கட்சிகளில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
அண்ணாதுரையும் ஈவேரா வும் மட்டும் வரவில்லை.
ஆனால் அண்ணாதுரை தி.மு.க வைத் தொடங்கிய பிறகு பொங்கல் நாளைத் 'திராவிடர் திருநாள்' என்று கொண்டாடினார்.

இதேபோல மார்சல் நேசமணி தலைமையிலான குமரி மீட்புப் போராட்டத்தில் ஒரே ஒரு கூட்டத்தில் நாய், மலம் என்று திராவிட பாணியில் பேசியதைத் தவிர எதுவும் செய்யவில்லை.

அண்ணாதுரையாரால் வந்த பெருங்கேடுகள் :-

1) 1944 சேலம் விக்டோரியா அரங்கில் நீதிக்கட்சியை 'தமிழர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்ய பேசி முடித்த நிலையில் மதிய உணவிற்கு பிறகு தனது 'சி.என்.ஏ தீர்மாணம்' மூலமாக 'திராவிடர் கழகம்' என்ற பெயரை மாற்றிய பெருங்கேடு செய்தவர் பொட்டுக்கட்டித் தெலுங்கர் அண்ணாத்துரை.

2) தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பரிசு சீட்டு (லாட்டரி சீட்டை) திட்டத்தை தமிழ் நாட்டில் அறிமுகம் படுத்தி
"பரிசு விழுந்தால் வீட்டுக்கு,
விழாவிட்டால் நாட்டுக்கு"
என்று எதுகை மோனையில் பேசி ஏழை எளிய தமிழ் மக்களை லாட்டரி சீட்டு மயக்கத்திற்கு ஆட்படுத்தியவர்.

3) ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி என்று தேர்தலில் பொய்யான வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றாமல் தமிழ் மக்களை ஏமாற்றியவர்.

4) பொய்யான இந்தி எதிர்ப்பை மேற்கொண்டு இரு மொழிக் கொள்கை என்னும் ஏமாற்றுக் கொள்கையை சட்டமன்றத்தில் தீர்மாணம் ஆக்கி,
ஆங்கிலத்தை கட்டாயமாக்கி
தமிழ் மொழி ஒரு பாடமாகக் கூட இல்லாமல் ஆக்கி
முதல் வகுப்பு முதல் முதல் முனைவர் பட்டம் வரை தமிழ்நாட்டில் தமிழை ஒழித்துக்கட்டியவர்.

5) தமிழ்நாட்டில் முதன் முதலில் கொள்கையற்ற 7 கட்சிக் கூட்டணியை உருவாக்கியவர் அண்ணாத்துரை.

6) கீழ்வெண்மணி படுகொலை நடந்தபோது பதவியிலிருந்தும் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
ஆனால் முதுகுளத்தூர் கலவரத்தின்போது முத்துராமலிங்கனாரை எதிர்த்தார்.
ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெளிநடப்பும் செய்தார்.

இப்படி நிறைய உண்டு.

இவர் செய்த ஒரே நன்மை
சங்கரலிங்கனார் உண்ணாமல் உயிர்விட்ட கோரிக்கையான 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்தை 12ஆண்டுகள் கழித்து தான் சாகும் தருவாயில் நிறைவேற்றியது மட்டும்தான்.

இன்று எங்கே நோக்கினாலும் அண்ணா அண்ணா என்று பெயரிடப்பட்டுள்ளது.
கண்ட கண்ட வந்தேறி வேசி மகனுக்கெல்லாம் திராவிடத்தால் வந்த வாழ்க்கை!

திராவிடம் என்றாலே வந்தேறிகள்.
அதிலும் பொய்யன், ஆங்கில அடிமை, சாதிவெறியன், திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன், பொம்பளப் பொறுக்கி, பொறம்போக்கு, மாமாப்பயல், தேவிடியாப் பயல், குடிகாரன், சாராய வியாபாரி, பணம் கொழுத்தவன், அவுசாரி, அம்மணக் கூத்தாடி என தேடி எடுத்த அத்தனைக் கழிசடை வந்தேறிகளும் அதில் இருக்கும்.